வெந்தது தணிந்தது காடு குறித்து முதன் முறையாக வாய்திறந்த சூர்யா.? என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா…!

தொடர்ந்து சினிமாவில் ஏராளமான சர்ச்சைகளில் சிக்கிக்கொண்டு தற்பொழுது அனைத்திலிருந்தும் மீண்டு மாநாடு திரைப்படத்தின் மூலம் கம்பேக் கொடுத்தவர் தான் நடிகர் சிம்பு. இப்படிப்பட்ட நிலையில் சமீப காலங்களாக இவருடைய நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இப்படிப்பட்ட நிலையில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி வந்த திரைப்படம் தான் வெந்து தணிந்தது காடு. இந்த திரைப்படத்திற்காக ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக காத்து வந்த நிலையில் இன்று அதிகாலை ரிலீசானது. இந்த திரைப்படத்தினை பார்த்த ரசிகர்கள் அனைவரும் படம் நன்றாக இருப்பதாக கூறி வருகிறார்கள்

மேலும் இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ள நிலையில் அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. இந்த படத்திற்காக கடின உழைப்பை சிம்பு செய்துள்ளார் அதாவது சில மாதங்களிலேயே 20 எடை வரை குறைத்தார். மேலும் ஒரு சாதாரண மனிதன் எப்படி டான் ஆகிறார் என்பதை மையமாக வைத்து தான் இந்த படம் உருவாகி இருந்தது.

இப்படிப்பட்ட நிலையில் தமிழகத்தில் மட்டும் 600 இருக்கும் ஏற்பட்ட திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. மேலும் ரசிகர்கள் கூறியதாவது சிம்புவின் கேரியரிலேயே இதுதான் மிகச்சிறந்த படம் எனவும், சிம்பு வேற லெவலில் நடித்துள்ளார் எனவும் கமெண்ட் செய்து வருகிறார்கள். இவ்வாறு தொடர்ந்து பாசிட்டிவ் கமெண்ட்களை சமூக வலைதளத்தில் பேசி வருகிறார்கள் சிம்புவின் ரசிகர்கள் மட்டுமல்லாமல் தொடர்ந்து சிம்புவை பிடித்த பிரபலங்களும் இது குறித்து பேசி வருகிறார்கள்.

அந்த வகையில் தற்பொழுது நடிகர் சூரியா ட்விட்டர் பதிவை வெளியிட்டுள்ளார் அதில் வெந்து தணிந்தது காடு படத்தினை பற்றி நல்ல விஷயங்களை கேள்விப்படுகிறேன் படத்தைப் பார்க்க காத்துக் கொண்டிருக்கிறேன் கௌதம் மேனனுக்காக சந்தோஷப்படுகிறேன். கலக்குங்க சிலம்பரசன் படம் பெரிய அளவில் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள் என சூர்யா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் சிம்பு மிக்க நன்றி அண்ணா என கமெண்ட் செய்துள்ளார்.

Leave a Comment

Exit mobile version