இப்பொழுது கோடிகளில் புரளும் சூர்யா நேருக்கு நேர் படத்தில் எவ்வளவு சம்பளம் வாங்கினார் தெரியுமா.! இதோ அவரே வெளியிட்ட தகவல்

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் சிவக்குமார் இவருக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள் சூர்யா மற்றும் கார்த்தி.  சூர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார் அதேபோல் கார்த்திக் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருகிறார்.

சூர்யா ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.  இவர்கள் குடும்பம் கலை குடும்பம் என்று கூறலாம் ஏனென்றால் அனைவருமே சினிமாவில் தங்களது பணியை பணியாற்றி வருகிறார்கள்.

ஆயிரம் தான் சினிமாவில் வாரிசு நடிகராக இருந்தாலும் தன்னுடைய தனித் திறமையால் இன்றுவரை பல ஆண்டுகளாக தனக்கென ஒரு இடத்தை சினிமாவில் தக்கவைத்துக் கொண்டுள்ளார்.  இன்று சூர்யா கோடிகளில் புரளும் நடிகர்தான் ஆனால் ஒரு காலகட்டத்தில் கடன் பிரச்சினை அவருக்கும் இருந்துள்ளது.

சமீபத்தில் ஒரு பேட்டியில் சூர்யா பேசுகையில் நான் எட்டாவது படிக்கும் பொழுது பல படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு வந்தது ஆனால் அந்த வாய்ப்பை எல்லாம் சிவகுமாரின் மகன் என்பதால் கிடைத்தது.  அப்பொழுது அந்த திரைப்படங்கள் நடிபதர்க்கு எனக்கு துளிகூட விருப்பம் இல்லை அதன் பின்னர் படித்து முடித்துவிட்டு வேலைக்கு சென்று விட்டேன்.

இதை நான் கூறினால் கூட யாரும் நம்பமாட்டார்கள் ஒரு கட்டத்தில் என்னுடைய குடும்பத்தில் 25 ஆயிரம் ரூபாய் கடனை அடைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டபோது நான்தான் மூத்த மகன் என்ற பொறுப்பிலிருந்து அந்த கடனை அடைக்கும் பொறுப்பு என்னிடம் இருந்தது அதனால் சினிமாவில் நடிக்கலாம் என முடிவு செய்து அப்போது வேலைக்கு தினமும் 80 கிலோமீட்டர் பயணம் செய்து வருவேன்.

இப்படி வெயிலில் வருவதால் என்னுடைய முகம் அங்கங்கே கருப்பாக இருக்கும் நான் சினிமாவில் நடிக்க போகிறேன் என்று சொன்னால் நீ எல்லாம் நடிக்கப்போகிறாயா என என்னுடைய நண்பர்கள் கைத்தட்டி சிரிப்பார்கள். எனக்குள் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் முடியாது என்று கூறியதை முடித்தே ஆகவேண்டும் என  தீவிர முயற்சி செய்வேன்.

neruku ner
neruku ner

வீட்டிலும் அப்படி தான் என்னால் முடியாது என்று கூறினால் அதனை எப்படியாவது செய்து முடிக்க வேண்டும் என மிகவும் கஷ்டப்படுகிறேன் அப்படித்தான் நான் நடிகன் ஆனதும். சினிமாவில் முதன் முதலாக நான் பணத்திற்காக தான் நடிக்க வந்தேன் அப்பொழுது நேருக்கு நேர் படம் வாய்ப்பு கிடைத்தது அந்த திரைப்படத்தில் எனக்கு 50 ஆயிரம் ரூபாய் சம்பளம் கிடைத்தது அதை அப்படியே எடுத்து வந்து அம்மாவிடம் கொடுத்து விட்டேன்.

நான் மிகப் பெரிய நடிகன் ஆவேன் என்று நான் நினைக்கவில்லை ஆனால் எனக்கான திருப்புமுனை கிடைத்தது அதை சரியாக பயன்படுத்திக் கொண்டேன் என கூறினார் சூர்யா.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment