பாலாவை டீலில் விட்ட சூர்யா.? அடுத்தது யார் படத்தில் தெரியுமா.?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சூர்யா இவர் நடிப்பில் வெளியான ஜெய் பீம் எதற்கும் துணிந்தவன் ஆகிய திரைப்படங்கள் கலவையான விமர்சனத்தை பெற்ற நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் ஒரு மிரட்டலான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

ஏற்கனவே சினிமாவில் வில்லனாக மிரட்டி வருகிறார் நடிகர் விஜய் சேதுபதி அதே பாணியில் சூர்யாவும் இறங்கியுள்ளது பலருக்கும் மகிழ்ச்சி அளித்துள்ளது. அதனைத் தொடர்ந்து பாலா இயக்கத்தில் சூர்யா இணைவதாக செய்திகள் பரவியது. இந்த நிலையில் சூர்யாவிற்கும் பாலாவிற்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக அந்த படத்தை பாதியில் நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது அதன் பிறகு திரும்பவும் பாலாவுடன் இணைந்த சூர்யா அந்த படத்தில் நடிக்க ஆரம்பித்தார்.

ஆனால் பாலா வணங்கான் படத்தின் கதையை முழுமையாக ஒப்படைக்காத காரணத்தால் அந்த படத்தை மீண்டும் பாதியிலே நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் பாலாவிற்கு குட் பாய் சொல்லிவிட்டு தற்போது சிறுத்தை சிவா கூட்டணியில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த படம் அடுத்த மாதம் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் நடிகர் சூர்யா அவர்கள் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படத்தில் நடிக்க உள்ளார். அந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. சூர்யா அவர்கள் வாடிவாசல் திரைப்படத்திற்காக ஜல்லிக்கட்டு காளையுடன் பயிற்சி எடுக்கும் வீடியோ சமீபத்தில் வெளியானது.

மேலும் இந்த படத்தில் படப்பிடிப்பும் விரைவில் தொடங்க உள்ளதாக வெற்றிமாறன் அவர்கள் ஒரு பொது நிகழ்ச்சியில் கூறியிருக்கிறார்.

Leave a Comment

Exit mobile version