பாலாவை டீலில் விட்டுவிட்டு தல அஜித்தின் ஆஸ்தான இயக்குனருடன் கைகோர்க்கும் நடிகர் சூர்யா..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சூர்யா இவர் சமீபத்தில் எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார் இத்திரைப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வருகிறது.

அந்த வகையில் எப்படியும் இந்த திரைப்படத்தின் வெற்றியை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பார்த்துக்கொள்ளும் ஆகையால் நடிகர் சூர்யா தன்னுடைய அடுத்த திரைப்படத்தின் மீது கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார். அந்தவகையில் இயக்குனர் பாலா அவர்கள் சூர்யாவிற்கு ஒரு கதையை கூறியிருந்தார்.

இவ்வாறு பாலாவிடம் அந்த கதையை சூர்யா கேட்டுவிட்டு மிகவும் நன்றாக இருக்கிறது கண்டிப்பாக இந்த திரைப் படத்தில் நான் நடிக்கிறேன் என்று பாலாவிடம் கூறியிருந்தாராம் ஆனால் சமீபத்தில் இயக்குனர் சிவா அவர்கள் சூர்யாவிற்கு ஒரு லைனில் ஒரு கதையை கூறியுள்ளார்.

இந்த நிலையில் இந்த கதை சூர்யாவிற்கு மிகவும் பிடித்ததன் காரணமாக தற்போது சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்க போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் நடிகர் சூர்யா ஒரே நேரத்தில் 2 திரை படத்தில் நடிக்கப்போவதாக தெரியவந்துள்ளது.

ஆனால் இதில் யார் திரைப்படத்தில் முதலில் நடிக்கப்போகிறார் என்ற குழப்பம் ரசிகர்களிடம் மிகுந்த மட்டுமல்லாமல். சூர்யா என்று பிரபல நடிகராக வலம் வருவதற்கு பாலா தான் காரணம் ஆகையால் முதலில் பாலா இயக்கத்தில் தான் நடிப்பார் என கூறி வருகிறார்கள்.

ஆனால் சமீபத்தில் சிவா இயக்கும் திரைப்படங்கள் அனைத்தும் ரசிகர் மனதில் இடம் பிடிப்பது மட்டும் இல்லாமல் நல்ல வரவேற்பையும் பெற்று தருகிறது இந்நிலையில் யார் சூர்யாவை வைத்து முதலில் திரைப்படம் இயக்கப் போகிறார் என்ற குழப்பம் ரசிகர்களிடையே மிகுந்த கிடைக்கிறது.

bala-1
bala-1

Leave a Comment