என்னை விட சூர்யாவுக்கு இரண்டு வயது அதிகம் தான்.! ஆனாலும் அவருக்கு அம்மாவாக நடித்தேன்.. பல வருட ரகசியத்தை போட்டு உடைத்த நடிகை..

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் நடிகர் சூர்யா. இவர் சூரரைப் போற்று திரைப்படத்திற்காக தேசிய விருது வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இதனை தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் பிசியாக நடித்து வரும் நடிகர் சூர்யா கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்பு வெளியான விக்ரம் திரைப்படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டி இருந்தார்.

இப்படி ஒவ்வொரு படத்திற்கு வேறுபாடு காட்டி வரும் சூர்யா பாலா இயக்கத்தில் வெளியான நந்தா படத்தில் ஒரு மிகப்பெரிய வேறுபாட்டை காட்டி இருப்பார். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மாத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. இந்த திரைப்படத்தில் சூர்யாவுக்கு அம்மாவாக நடித்தவர் தான் நடிகை ராஜஸ்ரீ.

கருத்தம்மா என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகை ராஜஸ்ரீ சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் நடிகை ராஜஸ்ரீ சினிமாவே வேண்டாம் என பிரேக் எடுத்துக்கொண்டார். பின்னர் மீண்டும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ஆசையினால் ரீ என்றி கொடுத்துள்ளார். அனால் அவருக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவில்லை அதற்கு பதிலாக ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அமுதாவும் அன்னலட்சுமி என்ற சீரியலில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் நடிகை ராஜஸ்ரீ ஒரு பேட்டியில் கலந்து கொண்டு அந்த பேட்டியில் தான் சினிமா வாழ்க்கையில் நடந்த சுவாரசியமான சில தகவல்களை கூறியுள்ளார் அப்போது நந்தா படத்தில் நடித்து கொண்டிருக்கும் போது சூர்யா என்னை விட இரண்டு வயது மூத்தவர் இருந்தாலும் நந்தா படத்தில் நான் சூரியாவுக்கு அம்மாவாக நடித்தேன் என்று கூறியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் சூர்யாவும் நானும் இன்றுவரையிலும் நல்ல நண்பர்களாக பழகி வருகிறோம் என்று கூறியுள்ளார். மேலும் சமீபத்தில் நான் பாலாவை நேரில் சென்று சந்தித்து உள்ளதாகவும் விரைவில் அவர் என்னை வைத்து படம் இயக்க உள்ளார் என்றும் கூறியுள்ளார் என்று அந்த பேட்டியில் ராஜஸ்ரீ கூறியுள்ளார்.

Leave a Comment