மீண்டும் வரலாற்று கதையில் நடிக்க போகும் சூர்யா.! எந்த இயக்குனருடன் கைகோர்க்க போகிறார் தெரியுமா.?

திரை உலகில் நுழையும் நடிகர்கள் பலரும் ஆரம்பத்தில் காமெடி ஆக்சன் என மாறி மாறி நடித்தாலும் ஒரு கட்டத்தில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டு பெரும்பாலும் ஆக்சன் கதைகளையே தேர்ந்தெடுத்து நடிப்பார்கள் ஆனால் இதிலிருந்து முற்றிலுமாக மாறுபட்டு நடிப்பவர் தான் நடிகர் சூர்யா.

ஆரம்பத்தில் காதல் திரைப்படங்களை எடுத்து பின்னர் ஆக்ஷன் திரைப்படங்களில் நடித்தார். இதில் இரண்டிலும் மாறி மாறி நடித்து வந்த சூர்யா ஒரு கட்டத்தில் வரலாற்றுக் கதைகளிலும் நடித்து அசத்தினார். மேலும் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பது சூர்யாவின் வழக்கமாக சமீப காலமாக இருந்து வருகிறது.

இதனால் தான் சூரியா படங்களுக்கு நல்ல வரவேற்பு மக்கள் மத்தியில் இருக்கின்றன. தற்போது கூட ஜெய்பீம், எதற்கும் துணிந்தவன் ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கின்றன. இதை முடித்த கையோடு அவர் வாடிவாசல் என்ற திரைப்படத்தில் இணைவார் என பலரும் எதிர்பார்த்து இருக்கின்றனர்.

தற்போது வந்த தகவலின் படி வெற்றிமாறனுடன் இணைவதற்கு முன்பாக அஜித், ரஜினி ஆகிய நடிகர்களை வைத்து சூப்பர் படங்களை இயக்கிய சிறுத்தை சிவாவுடன் நடிகர் சூர்யா இணைய போவதாக தகவல்கள் வெளியாகின்றன. சூர்யா மற்றும் சிறுத்தை சிவா இணையும் அந்த படம் ஒரு வரலாற்று திரைப்படமாக இருக்கும் என கூறப்படுகிறது.

அதுவும் இந்த திரைப்படம் வாடிவாசல் படத்திற்கு முன்பாக நடிகர் சூர்யா இந்த படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது ஏன் என்றால் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தை தொடர்ந்து வாடிவாசல் திரைப்படத்தில் தான் அதிகம் இணைவார் என்று பலரும் எதிர்பார்த்த நிலையில் தற்போது குறுக்கே வந்து உள்ளது பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது.

Leave a Comment