ஒன்பது இயக்குனர்கள் இயக்கும் வெப் சீரியஸ் தொடரில் சூர்யா.! இதோ டைட்டில்

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் இவர் முன்னணி நடிகராக வலம் வந்த சிவகுமாரின் மகன் ஆவார். இவர் நடிப்பில் அடுத்ததாக சூரரைப்போற்று திரைப்படம் வெளியாக இருக்கிறது இந்த திரைப்படத்தை சுதா கோங்கரா இயக்கியுள்ளார். படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து சூர்யாவிற்கு ஹரி இயக்கத்தில் அருவா திரைப்படமும் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படமும் உருவாகி வருகிறது அதுமட்டுமில்லாமல் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தில் பாண்டிராஜ் இயக்கத்தில் பக்கா கிராமத்து கதையில் ஒரு திரைப்படம் உருவாக இருக்கிறது, தற்பொழுது கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

அதனால் எந்த ஒரு படப்பிடிப்பும் நடைபெறவில்லை, அதனால் பல நடிகைகள் வெப் சீரியல் படையெடுக்க ஆரம்பித்து விட்டார்கள், அந்த வகையில் நடிகர் சூர்யா வெப் சீரியஸ் தொடரில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது, இந்த சீரியல் மொத்தம் ஒன்பது எபிசோடுகளாக உருவாக இருக்கிறது, இதில் ஒரு ஆச்சரியம் என்னவென்றால் ஒவ்வொரு எபிசோடும் ஒவ்வொரு இயக்குனர்கள் இயக்க இருக்கிறார்கள்.

9 எபிசோடுகளில் ஒரு எபிசோடை இயக்குனர் மணிரத்னம் இயக்க இருக்கிறார் அதேபோல் அரவிந்த்சாமி, சித்தார்த் ஆகியோர்களும் இந்த சீரியசை இயக்க இருக்கிறார்கள். இந்த நிலையில் நடிகர் சூர்யா நடிக்க இருக்கும் காட்சியை ஜெயேந்திரா பஞ்சாபிகேசன் என்பவர் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது இதற்க்கு ‘நவரச’ என  டைட்டில் வைத்திருப்பதாக கூறபடுகிறது.

மேலும் ஜெயேந்திரா பஞ்சாபிகேசன் சித்தார்த், ப்ரியா ஆனந்த், நித்யா மேனன் ஆகியோர் நடித்த 180 என்ற திரைப்படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒன்பது இயக்குனர்களை இயக்குவதால் இந்த வெப் சீரியஸ்க்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment