தாறுமாறாக படத்தை இயக்கும் முன்னணி இயக்குனரின் திரைப்படத்தில் கமிட்டான சூர்யா.? இணையத்தில் வெளியான அதிரடி தகவல் இதோ.

தமிழ் சினிமா உலகில் வாரிசு நடிகராக களம் இறங்கி பின்பு நிறைய திரைப்படங்களில் தனது அயராத உழைப்பை காட்டி ரசிகர்களிடையே தற்பொழுது உச்ச நட்சத்திரமாக விளங்கி வரும் நடிகர் தான் சூர்யா இவர் ஆரம்ப காலகட்டத்தில் நடித்த திரைப்படங்கள் அனைத்தும் கை கொடுக்கவில்லை என்றாலும் தனது விடாமுயற்சியினால் அடுத்தடுத்த திரைப்படங்களில் ரசிகர்களிடையே மிகவும் புகழ்பெற்று விளங்கி விட்டார் என்று தான் கூற வேண்டும்.

அந்த வகையில் பார்த்தால் இவர் நடித்த பிதாமகன்,காக்க காக்க,ஏழாம் அறிவு போன்ற பல திரைப்படங்கள் இவரது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது அதிலும் குறிப்பாக இவரது நடிப்பில் இறுதியாக வெளியான சூரரைப்போற்று திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும்,விமர்சன ரீதியாகவும் இவருக்கு நல்ல வரவேற்ப்பை தந்தது.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தற்போது பல முன்னணி இயக்குனர்களின் திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் இவர் பாண்டியராஜன் இயக்கும் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் நடித்து வருகிறார் இப்படத்தை பற்றி தான் ரசிகர்கள் மிக ஆவலுடன் பல தகவல்களை கேட்டு வருகிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் சூர்யா தற்பொழுதும் ஒரு திரைப்படத்தில் கமிட்டாகி உள்ளார் என ஒரு தகவல் இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது ஆம் சூர்யா மீண்டும் இயக்குனர் லிங்குசாமியின் இயக்கத்தில் ஒரு திரைப் படத்தில் கமிட்டாகி நடிக்கப் போகிறார் என்று இந்த தகவல் சமூக வலைதளப் பக்கங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

surya4
surya4

ஆனால் இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே கடந்த 2014 ஆம் ஆண்டு அஞ்சான் திரைப்படம் வெளியாகி மிகப் பெரிய ஹிட்டானது என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் இது மட்டும் உண்மையாக இருந்தால் மிகவும் சந்தோஷமாக இருக்கும் என கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment