புதிய லுக்கிற்க்கு மாறிய சூர்யா.! இது எந்த திரைப்படத்தில் நடிக்கப் போகிறார் என்பது தெரியலையே.!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக தற்போது சூர்யா மிகவும் உயர்ந்து விட்டார் என்றுதான் கூறவேண்டும் நடிகர் சிவகுமாரின் மகன் என்ற அடையாளத்தோடு தமிழ் சினிமாவில் கால் பதித்த சூர்யா தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்து கொண்டே வருகிறார்.இவர் நடிப்பில் இறுதியாக சூரரைப்போற்று என்ற திரைப்படம் வெளியாகிய நிலையில் சமிபத்தில் ஜெய்பீம் என்ற திரைப்படம் வெளியாகி மற்ற சமுதாய ரசிகர்களை கோப படுத்தும் வகையில் இருந்தது.

இந்த திரைப்படம் வெளியானபோது ரசிகர்கள் ஓரளவுக்கு நல்ல வரவேற்பு தந்தாலும் ஒரு சில ரசிகர்கள் சூர்யாவை விமர்சித்து திட்டி தீர்த்து வருகிறார்கள் இந்த திரைப்படம் மற்ற சமுதாயத்தைச் சேர்ந்த ரசிகர்கள் மட்டும் மக்களை அவமானப்படுத்தும் வகையில் இருந்ததாக பல ரசிகர்களும் சமூக வலைதளப் பக்கங்களில் கூறுகிறார்கள்.

மேலும் சூர்யா தற்போது இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில் எதற்க்கும் துணிந்தவன் திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படம் அடுத்த வருடம் பிப்ரவரி 4-ஆம் தேதி வெளியாகும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சூர்யா தொடர்ந்து தனது திரைப்படத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் என்ற திரைப்படத்திலும் நடித்து வருவதாக தகவல் வெளியாகி வரும் நிலையில் தற்பொழுது ஒரு சின்ன இடைவெளிக்காக சூர்யா துபாயில் இருக்கிறார்.

surya
surya

அங்கு தனது புதிய கெட்டப்பில் ரசிகர் ஒருவர் உடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார்.அந்த புகைப்படத்தை பார்க்கும் பொழுது சூர்யா பார்ப்பதற்கு ஆள் அடையாளமே தெரியாமல் மாறி புதிய கெட்டப்பில் புதிய திரைப்படத்தில் நடிக்கப் போகிறார் என்பது போல் இருக்கிறது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment