பல வருடங்கள் கழித்து ஜாலியாக பேசிக்கொண்ட சூர்யா மற்றும் விஜய்.! அதுவும் எந்த இடத்தில் தெரியுமா.?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக திகழ்ந்து வருபவர்கள்தான் விஜய் மற்றும் சூர்யா இவர்கள் இருவரும் நல்ல நண்பர்கள் என்று கூட கூறலாம் சொல்லப் போனால் இவர்கள் இருவரும் ஒரு காலத்தில் சேர்ந்து நடித்த ஒரு சில திரைப்படங்கள் மக்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்று விளங்கியது

மேலும் தற்பொழுது விஜய் மாஸ்டர் திரைப்படத்திற்குப் பின்பு இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படம் அவருக்கு நன்றாக நல்ல வரவேற்பு பெற்று வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்ய வாய்ப்பு இருக்கிறது எனவும் பல ரசிகர்களும் கூறி வருகிறார்கள் பொதுவாகவே தளபதி விஜய் நடிப்பில் வெளியாகும் பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று விடும்.

மேலும் சூர்யா ஜெய்பீம் திரைப்படத்திற்கு பிறகு எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் நடித்து வருகிறார் ஜெய் பீம் திரைப்படம் ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட திரைப்படமாக இருந்ததால் இந்த திரைப்படத்தை பார்த்துவிட்டு பல சினிமா பிரபலங்களும் வருத்தப்பட்டு வந்தார்கள்.

ஒரு சில பிரபலங்கள் உண்மையான கதை எப்பொழுதுமே தோற்றுப் போகாது அதனால்தான் இந்த திரைப்படம் அதிக நாட்கள் ஓடிக் கொண்டு இருக்கிறது என கமென்ட் பதிவு செய்து வருகிறார்கள் மேலும் சூர்யா மற்றும் தளபதி விஜய் ஆகிய இருவர்களும் தற்போது படப்பிடிப்பு தளத்தில் மிகவும் பிசியாக இருக்கிறார்கள்.

சமீபத்தில் இவர்கள் இருவரும் சந்தித்து பேசியதாகவும் தகவல் வைரலாகி வருகிறது ஆம் நேற்று பீஸ்ட் மற்றும் எதற்கும் துணிந்தவன் திரைப்படங்களில் படப்பிடிப்பு தளம் பெருங்குடியில் உள்ள சன் ஸ்டூடியோவில் நடந்துள்ளதாம் அப்பொழுது அங்கே இருவரும் சந்தித்து பேசிக் கொண்டார்கள் மேலும் இதனை வைத்து பார்த்த ரசிகர்கள் பலரும் அதற்கான புகைப்படங்கள் எதாவது வெளிவருமா என பலவிதமான கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

Leave a Comment