படப்பிடிப்பு தளத்தில் கமலுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்ட நடிகர் சூர்யா, கார்த்தி – இதுவரை யாரும் பார்த்திராத புகைப்படம்.!

இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உலக நாயகன் கமலஹாசனுடன் முதல் முறையாக கைகோர்த்து பணியாற்றிய திரைப்படம் விக்ரம். இந்த படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் மற்றும் சஸ்பென்ஸ் கலந்த திரைப்படமாக இருந்ததால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது.

ரசிகர்கள் படத்தை பார்த்துவிட்டு கே ஜி எஃப், RRR படங்களுக்கு நிகராக இந்த படமும் சிறப்பாக ஓடி ஒரு பிரம்மாண்டமான சாதனை படைக்கும் என கூறி வருகின்றனர் அவர்கள் சொல்வது போலவே இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் பிரம்மாண்டமான வசூலை தான் கடந்த சில தினங்களாக அள்ளி வருகிறது.

படத்தின் கதைக்கு ஏற்றவாறு கமலுடன் இணைந்து பகத் பாசில், விஜய் சேதுபதி, சூர்யா, நரேன் போன்றவர்களின் மிரட்டியுள்ளது. இது படத்திற்கு இன்னும் பக்கபலமாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை உலகம் முழுவதும் மூன்று நாட்களில் மட்டுமே  விக்ரம் படம் 150 கோடி வசூல் செய்துள்ளது.

வருகின்ற நாட்களிலும் நல்லதொரு வசூலை அள்ளி புதிய சாதனை படைக்கும் என கூறப்படுகிறது குறிப்பாக விக்ரம் திரைப்படம் சுமார் 400 க்கு மேல் வசூலை அள்ளி தான் நிற்கும் என்பது பலரின் கணிப்பாக இருக்கிறது.  கமலின் சினிமா பயணத்தில் இந்த திரைப்படம் ஒரு புதிய வசூல் சாதனையை நிகழ்த்துமாம்.

இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் கமலுடன் இணைந்து சூர்யா அவரது தம்பி நடிகர் கார்த்தி ஆகிய இருவரும் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர் இந்த புகைப்படமும் பருத்திவீரன் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப் படத்தை..

kamal, surya, karthi
kamal, surya, karthi

Leave a Comment