சூர்யா, கார்த்தி ரெண்டும் பேருமே அவுங்க அப்பா குணங்களை அப்படி வச்சி இருக்காங்க.! ஆனா சூர்யா இந்த விஷயத்தில் கொஞ்சம் வீக்.! உண்மையை சொன்ன தயாரிப்பாளர்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் என பெயர் பெற்ற சிவகுமாரை தொடர்ந்து அவரது வாரிசுகளான சூர்யா மற்றும் அவரது தம்பி கார்த்தி இருவரும் தமிழ் சினிமாவில் வெற்றி நடை கண்டு வருகின்றனர் இவர்கள் திரைப்படங்கள் ஒவ்வொன்றுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

சினிமா எப்படிப்பட்டது என்பதை சரியாக புரிந்துகொண்டு சூர்யா பயணிப்பதால் அவரை ஏராளமான ரசிகர்கள் தொடங்கி நடிகர் நடிகைகள் கூட அவரைப் பின்பற்றுகின்றனர் அந்தவகையில் சினிமாவில் ஆரம்பத்தில் சாக்லேட் பாயாக வலம் வந்து பின் ஆக்ஷனில் களமிறங்கி வெற்றி கண்டு வருகிறார்.

தற்போது இவரது நடிப்பில் ஜெய்பீம் மற்றும் எதற்கும் துணிந்தவன் ஆகிய திரைப்படங்கள் உருவாகி வருகின்றன. இந்த நிலையில் தயாரிப்பாளர் ராஜன் பேட்டி ஒன்றில் சூர்யா கார்த்தி பற்றி வெளிப்படையாக பேசியுள்ளார் அவர் கூறியது. நடிகர் சிவகுமாரின் ஒழுக்கம் காலம் தவறாமை நடிப்பில் நேர்த்தி என அனைத்து நற்குணங்களும் சூர்யா மற்றும் கார்த்தி இருவருக்கும் இருப்பதாக தெரிவித்தார்.

மேலும் OTT தளங்களில் படங்களை வெளியிடுவது பற்றியும் ராஜன் பேசினார். கொரோனா காரணமாக திரையரங்குகளில் திரைக்கு வராத காரணத்தினால் நடிகர் சூர்யா முதன்முதலாக OTT முறையை தேர்ந்தெடுத்து அந்த காலகட்டத்திற்கு சரியாக இருந்தாலும் தற்போது திரையரங்குகள் திறக்கப்பட்டு வருகின்றன.

இனிமேல் நடிகர் சூர்யா திரையரங்கில் படத்தை வெளியிடுவது பற்றி யோசனை செய்ய வேண்டும் மேலும் தியேட்டர் உரிமையாளர் சங்கம் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் உடன் ஒரு ஒப்பந்தம் செய்துள்ளது.

அதன்படி திரையரங்குகளில் வெளியிடப்படும் படங்கள் குறைந்தது பத்து நாட்களோ அல்லது ஒரு மாதம் கழித்து பிறகுதான் அந்த படத்தை OTT தளத்தில் தரவேண்டுமென தெரியப்படுத்தப்பட்டுள்ளது. இதை நடிகர் சூர்யா யோசித்து பார்க்க வேண்டும் என கூறி உள்ளார்.

surya and karthi
surya and karthi

Leave a Comment