உங்க நடிப்பு திறமையை பார்த்துட்டோம் சூர்யாவை பாதியிலேயே அனுப்பிய இயக்குனர்.. கோபத்தின் உச்சிக்கே சென்று பிரபலத்தை லெப்ட், ரைட் வாங்கிய சிவகுமார்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக ஓடிக்கொண்டிருப்பவர் சூர்யா. இவர் நடிப்பில் தற்போது சூர்யா 42 திரைப்படம் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது இந்த படம் முழுக்க முழுக்க வரலாற்றுச் சம்பந்தப்பட்ட ஒரு படமாக இருப்பதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போது மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து காணப்படுகிறது.

சூர்யா 42 படத்தின் படப்பிடிப்பு பல்வேறு முக்கிய இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது இப்படி இருக்கின்ற நிலையில் சூர்யாவின் பழைய மற்றும் புதிய செய்திகள் வெளி வருகின்றன. அப்படி சூர்யா நடித்த ஒரு திரைப்படம் குறித்து தான் பார்க்க இருக்கிறோம் சூர்யா முதலில் நடித்து திரைக்கு வந்த திரைப்படம் நேருக்கு நேர்.. இந்த படத்தில் விஜய் உடன் இணைந்து நடித்திருப்பார்.

முதலில் நேருக்கு நேர் திரைப்படத்தில் சூர்யாவுக்கு பதில் நடித்துக் கொண்டிருந்தது அஜித் தான் சில காரணங்களால் அவர் வெளியேற பின் சூர்யா நடித்தார் அதுவும் சூர்யா படத்தில் நடிக்க தானாக வரவில்லை. சூர்யாவுக்கு அப்பொழுது நடிப்புனா என்னன்னு தெரியாத சமயம் இயக்குனர் வசந்த் தான் சிவகுமாரிடம் சென்று உங்கள் மகனை நடிக்க அனுப்புமாறு கேட்டுள்ளார்.

அதற்கு சிவக்குமார் என் பையனுக்கு நடிக்க சுத்தமா தெரியாது எனக் கூற அது எல்லாம் நாங்க பார்த்துக்கிறோம் என கூறி வசந்த் குமார் சூர்யாவை நேருக்கு நேர் திரைப்படத்தில் நடிக்க வைத்தார். படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் வெற்றிகரமாக முடிந்து விட்டு படக்குழு டப்பிங் பணிகளை நோக்கி நகர்ந்தது அப்பொழுது சூர்யா சரியாக டப்பிங் பேச வரவில்லை..

surya

குரல் நன்றாக இருந்ததும் இவர் வாய்ஸ் டப்பிங்க்கு செட் ஆகவில்லை என இயக்குனர் டப்பிங் பேச ஹீரோ விக்ரமை வர வைத்தனர். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட சூர்யாவின் அப்பா சிவக்குமார் நேராக வந்து இயக்குனர் வசந்தை திட்டி தீர்த்தார் அதன் பிறகு சூர்யா டப்பிங் பணிகளை பேசி முடித்தாராம்.

Leave a Comment

Exit mobile version