சூர்யாவின் 39 படத்தை இயக்கும் இயக்குனர் ஹரி எவ்வளவு ஊதியத்தை குறைத்துயுள்ளார்.!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் இயக்குனர் ஹரி இவர் தமிழில் 2002 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகம் ஆனார் இதனை தொடர்ந்து அவர் தமிழில் பல வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கோவி,ல் அருள், ஆறு, தாமிரபரணி, வேல், சேவல், சாமி, சிங்கம், வேங்கை, போன்ற படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு நிலையான இடத்தை பிடித்துக்கொண்டார்.

இவர் சூர்யாவின் 39 படமான அருவா திரைப்படத்தை இயக்க உள்ளார். ஆனால் ஊரடங்கு உத்தரவு காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு பாதிப்பினால் சினிமா துறையைச் சார்ந்த பலர் பாதிக்கப் பட்டுள்ளதால் இயக்குனர் ஹரி அவர்கள் தனது சம்பளத்திலிருந்து 25% குறைத்துள்ளார்.

இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்ட அரிய அவர்கள் தயாரிப்பாளர்கள் நல்ல நிலையில் இருந்தால்தான் திரைத்துறை மீண்டும் நல்ல நிலைக்கு திரும்பும் என்பதை கருத்தில் கொண்டு நான் அடுத்து இயக்கப்போகும் அருவா படத்திற்காக 25% ஊதியத்தை குறைத்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.

இயக்குனர் ஹரி போல மற்ற நடிகர்களும் தனது சம்பளத்தை குறைத்து வருகின்றனர் அந்த வகையில் இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் அண்டனி அவர்கள் தனது இலிருந்து 25 சதவீதத்தை குறைக்க போவதாக அறிவித்துள்ளார் என்பது குறிபிடத்தக்கது.

Leave a Comment