பாலா திரைப்படத்தை உதறி தள்ளிய சூர்யா? வளர்த்த கடா மார்பில் பாயுதே என வருத்தப்பட்ட பாலா.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா இவர் தற்போது தனக்கான ரசிகர் கூட்டத்தை பெற்றுள்ளார், தமிழகம் மட்டுமல்லாமல் பிற மாநிலங்களிலும் ரசிகர் கூட்டத்தை பெற்றுள்ளார். ஆனால் இவர் கடைசியாக நடித்த திரைப்படங்கள் இவருக்கு பெரிய வெற்றியை கொடுக்காததால் அடுத்ததாக எப்படியாவது ஹிட் கொடுக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறார்.

இந்நிலையில் சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப்போற்று திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் கொரோனா ஊரடங்கால் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது. அதேபோல் படம் திரையரங்கில் மட்டுமே வரும் என அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது.

இந்தநிலையில் சூர்யாவை உயர்த்திய இயக்குனர்களில் மிகப்பெரிய பங்கு இயக்குனர் பாலாவுக்கு உண்டு இவர் இயக்கிய பிதாமகன் மற்றும் நந்தா திரைப்படம் சூர்யாவை புகழின் உச்சத்திற்கே கொண்டு சென்றது, சூர்யாவை பிடிக்காதவர்களுக்கு கூட இந்த இரண்டு திரைப்படங்களை பிடித்து விடும் அந்த அளவு மிகப் பெரிய வெற்றி பெற்றது.

இந்த திரைப்படத்தின் மூலம் சூர்யா தனது நடிப்பு திறமையை வெளி உலகற்கு காட்ட ஏதுவாக அமைந்தது, இப்படி இருக்கும் நிலையில் சூர்யாவை வைத்து பாலா மீண்டும் படத்தை இயக்க வாய்ப்பு கேட்டு சென்றாராம், ஆனால் சூர்யா தற்பொழுது இருக்கும் மார்க்கெட்டிற்கு உங்களுடன் சேர்ந்து படம் செய்தால் சரி வராது என மூஞ்சியில் அடித்தது போல் கூறிவிட்டாராம்.

அதுமட்டுமில்லாமல் இப்பொழுது உங்களுடன் நடித்தால் கண்டிப்பாக பாக்ஸ் ஆபீஸில் தோல்வியை தழுவும் அது என்னுடைய வளர்ச்சிக்கு நல்லதல்ல என தெரிவித்து விட்டாராம், அப்பொழுதுதான் பாலா வளர்த்த கடா மார்பிலே பாய்ந்து என வருத்தப்பட்டாராம். சூர்யாவும் அந்தத் திரைப்படத்திற்கு பிறகு நடித்த ஒவ்வொரு திரைப்படமும் சூர்யாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது அந்த வகையில் பார்க்கப் போனால் சூர்யா பாலாவுடன் நடித்தால் அவரின் நிலைமை தலைகீழாக மாறி இருக்கலாம் என கூறுகிறார்கள் கோலிவுட் வட்டாரங்கள்.

சூர்யா பாலாவின் திரைப்படத்தை ஏற்க மறுத்ததால் பாலாவும் சூர்யாவும் சிலகாலம் பேசிக் கொள்ளாமலேயே இருந்தார்கள், அதன் பிறகு மீண்டும் பாலா ஜோதிகாவை வைத்து நாச்சியார் திரைப் படத்தை எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது, இந்த தகவலை பிரபல சித்ரா லட்சுமணன் தெரிவித்திருந்தார்.

Leave a Comment

Exit mobile version