திடீரென சச்சினை சந்தித்த சூர்யா.! என்ன பதிவிட்டுள்ளார் பாருங்க..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் சூர்யா தற்பொழுது தொடர்ந்து சில திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில் அந்த படத்தின் படப்பிடிப்புகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சில வருடங்களுக்கு முன்பு சூர்யா நடிப்பில் வெளிவந்த திரைப்படங்கள் தொடர்ந்து மிகப்பெரிய தோல்வியினை பெற்ற நிலையில் சூரரைப் போற்ற திரைப்படத்தின் மூலம் வெற்றி திரைப்படத்தை கொடுத்தார்.

பிறகு ஜெய் பீம், எதற்கும் துணிந்தவன் என மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு தரும் திரைப்படங்களில் நடித்திருந்தார் மேலும் சூரரைப் போற்று திரைப்படத்திற்காக சிறந்த நடிகர் என்பதற்கான தேசிய விருதையும் பெற்றார். இதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் வெளிவந்த விக்ரம் திரைப்படத்தில் ரோலக்ஸ் என்னும் சிறப்பு கேமியோ கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்கள் மனதையும் கவர்ந்தார்.

இந்த படம் இவருக்கு மிகப்பெரிய ஒரு பிரபலத்தினை தந்தது. எனவே இந்த திரைப்படத்தில் சூர்யா நடித்ததற்காக ரோலக்ஸ் கடிகாரத்தையும் கமலஹாசன் அவர்கள் பரிசாக அளித்தார். இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது சூர்யா சிறுத்தை சிவா இயக்கத்தில் சூரியன் 42 திரைப்படத்தில் நடித்துவரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மேலும் இந்த படத்தில் நடிப்பதற்காக சூர்யா மிகவும் கடுமையாக ஒர்க்அவுட் செய்யும் வீடியோக்களும் சோசியல் மீடியாவில் வைரலாக ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்து வருகிறார்கள். இதனை அடுத்து சில மாதங்களுக்கு முன்பு மோஷன் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்ற நிலையில் கிட்டத்தட்ட 10 மொழிகளில் இந்த படம் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த படத்தினை முப்பரிமாண முறையில் 3டி தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

எனவே ‘ஒரு வலிமை மிக்க வீரம் மிக்க கதை’ என்ற வசனத்துடன் மோஷன் போஸ்டரை வெளியிட்டு இருந்தனர். இந்த படத்தில் வெற்றி பழனிசாமி ஒளிப்பதிவு செய்ய, கலை இயக்குனராக மிலன் பணியாற்றியுள்ளார் வசனங்களை மதன் கார்த்தி எழுதியுள்ளார். இதனை அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படத்தில் நடிப்பதற்கான பணிகளில் சூர்யா மேற்கொள்ளார்.

surya
surya

இவ்வாறு பிசியாக இருந்து வரும் சூர்யா தற்பொழுது முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் சச்சின் டெண்டுல்கரை நேரில் சந்தித்திருக்கும் நிலையில் அதனை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் அதில் மரியாதை & அன்பு என பதிவிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்காகி வருகிறது.

Leave a Comment