வெறும் மூன்று படம்தான் தலைகனத்தில் தயாரிப்பாளரிடம் பணத்திமிரை காட்டிய சூர்யா பட நடிகை.! இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியல…

தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வரும் பிரபல நடிகை ஒருவர். அறிமுகமான முதல் படத்திலேயே மிகப்பெரிய அளவில் பிரபலமானார் என்ரே சொல்லலாம் அவர்தான் நடிகை பிரியங்கா அருள் மோகன். இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் வெளியான டாக்டர் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

டாக்டர் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாகவும் நடிகர் சிவகார்த்திகேயனுடன் ஜோடியாக டான் திரைப்படத்தில் நடித்தார் இந்த திரைப்படமும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதன் பிறகு சூர்யா நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படம் ஓடிடி- யில் வெளியானது இந்த திரைப்படத்திலும் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி தான் நடித்த மூன்று படத்திலும் முன்னணி நடிகருடன் நடித்துவிட்டு தற்போது தனுஷ் உடன் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் இவர் நடித்த டிக்டாக் என்ற படம் கிடப்பில் இருக்கிறது. இந்த நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளர் இந்த படத்தை ரிலீஸ் செய்ய தற்போது தயாராகி வருகிறாராம்.

இது தெரிந்த பிரியங்கா அருள் மோகன் இந்த படத்தை வெளியிடக்கூடாது என்று தயாரிப்பாளரிடம் கூறியதாக கூறப்படுகிறது ஏனென்றால் இந்த திரைப்படத்தில் நடிகை பிரியங்கா மோகன் கிளாமரில் தாராளம் காட்டியிருப்பதாக கூறப்படுகிறது இந்த படம் வெளியானால் தன்னுடைய சினிமா மார்க்கெட் குறைந்த விடும் என்று எண்ணி அந்த படத்தின் தயாரிப்பாளர் இடம் இந்த படத்தை வெளியிட வேண்டாம் என்று கூறி இருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் இந்த படத்திற்காக தயாரிப்பாளர் எவ்வளவு செலவு செய்தாரோ அதை மொத்தமாக திருப்பி கொடுத்து விடுகிறேன் என்று தன்னுடைய பணத்திமிரை காட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதை பார்த்த நெட்டிசன்கள் நடித்தது மூன்று படம் அதற்குள் தலைகணத்தில் பணத்திமிரை காட்டுறீங்களா என்று கூறி வருகிறார்கள்.

Leave a Comment