சூர்யா 42 படத்தின் அப்டேட் கொடுத்த தயாரிப்பு நிறுவனம்.! உச்சகட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் சூர்யா 42 திரைப்படம் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் நடிகர் சூர்யா அவர்கள் பல கெட்டப்புகளில் நடித்து வருவதாகவும், 3d தொழில்நுட்பத்தில் இந்த திரைப்படம் உருவாகி வருவதாகவும் கூறப்படுகிறது.

எதற்கும் துணிந்தவன், விக்ரம் ஆகிய திரைப்படங்களுக்கு பிறகு நடிகர் சூர்யா அவர்கள் இயக்குனர் பாலா உடன் இணைந்து வணங்கான் திரைப்படத்தில் நடித்து வந்தார். ஆனால் படபிடிப்பு தளத்தில் சூர்யாவிற்கும் பாலாவிற்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சூரிய அவர்கள் வணங்கான் திரைப்படத்திலிருந்து வெளியேறினார்.

அதன் பிறகு இயக்குனர் பாலா சூர்யாவிற்கு ஏற்றவாறு வணங்கான் கதை அமையவில்லை ஆகையால் சூர்யா இந்த படத்தில் இருந்து விலகி உள்ளார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். வணங்கான் திரைப்படம் பாதியில் நின்றதை தொடர்ந்து அடுத்ததாக வெற்றி மாறன் உடன் இணைந்து வாடிவாசல் திரைப்படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

அதுமட்டும் இல்லாமல் வாடிவாசல் படத்திற்காக மாடு பிடி வீரர்களுடன் பயிற்சி எடுத்துகொண்டார். அதுமட்டும் இல்லாமல் இந்த வீடியோவும் இணையத்தில் விரலானது. இதனால் நடிகர் சூர்யா வாடிவாசல் படத்தில் தான் நடிக்க போகிறார் என்று கூறப்பட்டது.

ஆனால் வாடிவாசல் படத்தில் நடிக்காமல் சிறுத்தை சிவா இயக்கும் சூர்யா 42வது திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த நிலையில் தற்போது சூர்யா 42 திரைப்படம் குறித்த ஒரு அப்டேட் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

அதாவது சமீபத்தில் தயாரிப்பாளர் தனஞ்செழியன் அவர்கள் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளிக்கும் பொது சூர்யா 42 படத்தின் நடப்பு கால கதை களத்தின் படபிடிப்பு விரைவில் முடிவடைய இருக்கிறது அதன் பிறகு பிரமாண்ட காட்சிகளின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக தனஞ்செழியன் கூறியுள்ளார் இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் இரட்டிப்பாகி இருக்கிறது.

Leave a Comment