சூர்யா நடிக்கும் 39வது திரைப்படத்தின் இயக்குனர் மற்றும் டைட்டில் அறிவிப்பு. அப்போ இந்த படத்துல வெட்டு இருக்குடா..!

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் இவர் தற்பொழுது சூரரைப்போற்று திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார், இந்த திரைப்படத்தை விரைவில் வெளியிட இருக்கிறது படக்குழு, இந்தநிலையில் சூர்யா அடுத்ததாக யார் இயக்கத்தில் நடிக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்து வந்தது.

தற்பொழுது இவர் யாருடன் நடிக்க போகிறார் என்ற தகவலை படக்குழு அறிவித்துள்ளது, நடிகர் சூர்யா தனது 39வது திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் சார்பாக கே இ ஞானவேல் ராஜா தயாரிப்பில் நடிக்க இருக்கிறார். இந்த திரைப்படத்தை ஹரி அவர்கள் இயக்க இருக்கிறார்.

இவர்கள் கூட்டணியில் உருவாகும் ஆறாவது திரைப்படம் தான் இந்த திரைப்படம், இதற்கு முன் இவர்கள் இணைந்து ஆறு, வேல், சிங்கம் , சிங்கம் 2, சிங்கம் 3 என ஐந்து திரைப்படங்களில் பணியாற்றி உள்ளார்கள், இந்தநிலையில் ஆறாவது திரைப்படமாக இணையும் இவர்களது படத்திற்கு ‘அருவா’ என பெயர் வைத்துள்ளார்கள்.

அருவா திரைப்படத்திற்கு டி இமான் தான் இசையமைக்க இருக்கிறார், டி இமான் முதன்முறையாக சூர்யா மற்றும் ஹரியுடன் இணைவது குறிப்பிடத்தக்கது, இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பை வருகின்ற ஏப்ரல் மாதம் தொடங்கி ஒரே கட்ட படப்பிடிப்பை முடித்து விட்டு வருகின்ற தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளது படக்குழு.

suriya 39
suriya 39

Leave a Comment