விடுதலை திரைப்படத்தை தொடர்ந்து தனது டப்பிங் பணியை அடுத்த திரைப்படத்தில் முடித்த நடிகர் சூரி.! வீடியோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக்..

தமிழ் சினிமாவில் பல வருடங்களாக காமெடி நடிகனாக நடித்து தற்பொழுது கதாநாயகன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் தான் சூரி இவர் நிறைய திரைப்படங்களில் காமெடி நடிகனாக நடித்து மக்கள் மத்தியில் எப்படியோ தனக்கென ஒரு பெயரையும்,புகழையும் தேடிக்கொண்டார்.

அந்த வகையில் பார்த்தால் இவரது நடிப்பில் வெளியான விடுதலை திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று விட்டதால் தொடர்ந்து இவருக்கு கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் ஒரு சில பிரபலங்கள் கூறி வருகிறார்கள்.மேலும் நடிகர் சூரி திரைப்படங்களில் நடிக்கும் பொழுது தனது நடிப்பை இயல்பாக வெளிப்படுத்தும் குணம் உடையவர் என்பது நமக்குத் தெரிந்த விஷயம்.

என்றாலும் இவர் தொடர்ச்சியாக தற்பொழுது பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். ஆம் இவர் பல முன்னணி பிரபலங்கள் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படங்களில் தனது நடிப்பை இயல்பாக வெளிப்படுத்தி வருகிறார். அவ்வாறு இவர் நடித்துவரும் திரைப்படங்களில் ஒன்றுதான் ஏழு கடல் ஏழுமலை.

இந்தத் திரைப்படத்தில் பல முக்கிய பிரபலங்கள் நடித்திருந்தாலும் சூரி ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது மட்டும் தெரிகிறது. தற்பொழுது இந்த திரைப்படத்தின் டப்பிங் பணியை முழுமையாக முடித்து விட்டோம் என்பதை கூறும் விதமாக சூரி தனது twitter பக்கத்தில் இந்த திரைப்படத்தில் டப்பிங் பேசும்போது எடுத்த ஒரு சில காட்சிகளை வெளியிட்டுள்ளார்.

மேலும் இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் சூரி இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது எங்களுக்கும் தெரிகிறது. இவர் இன்னும் நிறைய திரைப்படங்களில் கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்பதுதான் எங்களது ஆசை என ஒரு சில ரசிகர்கள் தங்களது கருத்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.

Leave a Comment