சுரேஷ் தாத்தாவை தொடர்ந்து மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழையும் இந்த சீசன் போட்டியாளர்.! ஏமாற்றிய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை தந்த பிரபலம்..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது தான் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது இந்நிகழ்ச்சி 90 நாட்களை கடந்துள்ள நிலையில் தற்போது மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது மேலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று முன்னணி வகிக்க வேண்டும் என்பதற்காக தற்பொழுது பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பட்டு எங்கும் பிரபலம் அடைந்த சுரேஷ் தாத்தா பங்கு பெற்றிருக்கிறார்.

அவர் கலந்து கொண்ட முதல் நாளே விக்ரமன், அமுதவாணன் என அனைவரையும் வச்சி செய்து வருகிறார் மேலும் இவருடைய வருகைக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இவ்வாறு போய்க் கொண்டிருக்கும் நிலையில் இந்நிகழ்ச்சியில் கடந்த வாரம் ரட்சிதா வெளியேறிய நிலையில் இந்த வாரம் இரண்டு எபிக்ஷன் இருக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து பணப்பெட்டியும் இந்த வாரம் தான் வைக்க இருக்கிறார்கள் எனவே இந்த பணப்பெட்டியை மைனா நந்தினி அல்லது கதிர் இவர்களில் ஒருவர் எடுக்க வாய்ப்பு இருப்பதாகவும் ரசிகர்கள் கூறி வருகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் மேலும் பிக்பாஸ் சீசன் 6வது நிகழ்ச்சிகள் கலந்து கொண்ட பிரபல போட்டியாளர் ஒருவர் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்கு என்ட்றி கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மனதை மேலும் கவர்ந்தவர் தான் ஜிபி முத்து. இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்து வரும் நிலையில் இந்நிகழ்ச்சியில் இவரை பெரிதளவிலும் எதிர்பார்த்து வந்தார்கள் ஆனால் இவர் ரசிகர்களுக்கு பெரிதும் ஏமாற்றத்தை தந்தார். திடீரென பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் இது ரசிகர்கள் மத்தியில்.

பெரிதும் சோகத்தை ஏற்படுத்தியது இப்படிப்பட்ட நிலையில் மறுபடியும் இந்த வாரம் கெஸ்ட் போட்டியாளராக பிக்பாஸ் வீட்டிற்க்குள் நுழைகிறார். அதாவது பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஜிபி முத்து தொடர்ந்து ஏராளமான திரைப்படங்கள் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்று வரும் நிலையில் இவர் மறுபடியும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் டிஆர்பி எதிரும் என விஜய் டிவி சூப்பர் பிளான் போட்டுள்ளது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment