இந்த வாரம் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய சுரேஷ் சக்ரவர்த்தி – கடைசியாக என்ன சொல்லிவிட்டு சென்றுள்ளார் தெரியுமா.?

சென்ற வாரம் கமலஹாசன் கோலாகலமாக தொடங்கி வைத்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தற்போது ஒரு வாரத்தைக் கடந்து உள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் ஐந்து சீசன்களில் கலந்து கொண்ட முக்கிய போட்டியாளர்கள் சிலரை வைத்து ஹாட்ஸ்டாரில் பிக் பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

மேலும் இதுவரை நடந்த பிக்பாஸ் சீசன்களில் ஒரு நாள் முழுவதும் நடந்தவற்றை எடிட் செய்து ஒரு மணி நேரம் மட்டுமே ஒளிபரப்பாகி வந்த நிலையில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி 24 மணி நேரமும் ஹாட்ஸ்டார் இல் ஒளிபரப்பாகி வருகிறது .

மேலும் கடந்த சீசன்களுக்கு மாறாக தற்போது ஆரம்பித்த சில நாட்களிலேயே நிகழ்ச்சி விறுவிறுப்பாக பயணித்து வருகின்றனர். முதல் நாளே நடந்த நாமினேஷனில் ஜூலி, அனிதா, சினேகன், வனிதா, சுரேஷ் சக்கரவர்த்தி, அபிநய் போன்ற சிலரும் நாமினேட் ஆகி இருந்தனர். மேலும் இதற்கு முன் நடைபெற்ற சீசன்களில் முதல் வாரத்தில் எவிக்ஷன் இருக்காது.

போட்டியாளர்கள் எல்லோரும் சக போட்டியாளர்கள் இடையே மகிழ்ச்சியாக பேசி இருந்தனர். ஆனால் அதற்கு மாறாக இந்த சீசனில் முதல் வாரம் எவிக்ஷன் உள்ளதாம். அதனிடையே இந்த வாரம் நாமினேட் ஆனவர்களில் குறைந்த வாக்குகளைப் பெற்று கடைசி இரண்டு இடத்தில் வனிதா மற்றும் சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளனர்.

இதில் சுரேஷ் சக்கரவர்த்தி இந்த வாரம் வெளியேற போவதாக தகவல்கள் வெளியாகின. இதனிடையே பிக்பாஸ் வீட்டில் நடைபெற்ற கேப்டன் டாஸ்கில் வெற்றி பெற்று சுரேஷ் அடுத்த வார கேப்டனாகவும் தேர்வாகியுள்ளார். தற்போது வெளியேறும் சுரேஷ் சக்கரவர்த்தி கேப்டன் பதவியை சினேகனுக்கு கொடுத்துவிட்டுப் செல்கிறாராம்.

Leave a Comment