இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் தொலைபேசியில் பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்..! எதற்காக தெரியுமா..?

தமிழ் சினிமாவில் சமீபத்தில் வசந்த் ரவி மற்றும் பாரதிராஜா நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ராக்கி இந்த திரைப்படத்தை அருண் மாதேஸ்வரன் அவர்கள்தான் இயக்கியுள்ளார். இவர் உருவான இந்த திரைப்படம் திரையரங்கில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இவ்வாறு இந்த திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் பாரதிராஜா மற்றும் வசந்த் ரவி ஆகிய இருவரையும் நேரில் அழைத்து பாராட்டி உள்ளார்கள் இவ்வாறு அவர் பாராட்டும் வகையில் எடுக்கப்பட்ட புகைப்படம் கூட சமூக வலைதளங்களில் வைரலாக பரவின.

rajini-2
rajini-2

அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தினை ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தான்  தயாரித்துள்ளது ஆகையால் அந்த நிறுவனத்தின் உரிமையாளர்களான நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரையும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார்.

அந்தவகையில் நேற்று இயக்குனர் விக்னேஷ் சிவனுடன்  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தொலைபேசியில் பேசியப்போது அவருக்கு பல்வேறு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவன் பல பதிவுகளை வெளியிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார் அந்த வகையில் அவர் கூறியது என்னவென்றால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எனக்கும் நயன்தாராவுக்கும் பாராட்டு தெரிவித்துள்ளார் என்று கூரினார்.

rajini-1
rajini-1

அதுமட்டுமில்லாமல் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கூறிய ஒவ்வொரு வார்த்தைகளும் இன்றும் என்னுடைய காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது  அந்தவகையில் அவர் கொடுத்த நம்பிக்கையும் மன உறுதியையும் நான்  ஒருபோதும் மறக்க மாட்டேன் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment