உலகப் புகழ் பெற்ற இரண்டு பெண்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட “சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்”.. தலைவர் கோல மாஸ்

திரையுலகில் 40 வருடங்களுக்கு மேலாக நடித்து ஓடிக்கொண்டிருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவர் இதுவரை 160 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் அதில் விரல் விட்டு என்னும் அளவிற்கு தான் தோல்வி படங்களை கொடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்பொழுதும் ஹிட் படங்களை கொடுக்க ரஜினி அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார்.

அதில் முதலாவதாக ரஜினி இளம் இயக்குனர் நெல்சன் உடன் கைகோர்த்து ஜெயிலர் திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் இந்த படம் மிகப்பெரிய ஒரு ஆக்சன் பேக் திரைப்படமாக உருவாகிய வருகிறது படத்தில் ரஜினி உடன் கைகோர்த்து மோகன் லால், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, வசந்த ரவி, விநாயகன்..

மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் விறுவிறுப்பாக நடித்து வருகின்றனர். ஜெயிலர் படத்தின் இறுதிக்கட்ட சூட்டிங் போய்க்கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது இதனைத் தொடர்ந்து ஐஸ்வர்யா ரஜினி இயக்கும் லால் சலாம் திரைப்படத்தில் ஒரு கெஸ்ட் ரோல் ரஜினி பண்ண இருக்கிறார் அதனை தொடர்ந்து லைகா நிறுவனத்துடன் கைகோர்த்து மிகப்பெரிய ஒரு படத்திலும் நடிக்க இருக்கிறார்.

அதற்கான அறிவிப்பு நேற்று பிரமாண்டமாக அறிவித்தது. இப்படி அடுத்தடுத்த படம் ரஜினி பண்ண உள்ளதால் அவருடைய மார்க்கெட் உயிரும் என கூறப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலக அளவில் பிரபலம் அடைந்த இரண்டு பெண்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கிறார்.

அந்த இரண்டு பிரபலங்கள் வேறு யாரும் அல்ல மாடல் அழகியும், நடிகையுமான் பிரியங்கா சோப்ரா மற்றும் உலக புகழ்பெற்ற பிரபலம் சானியா மிர்சா ஆகிய இரண்டு பேருடன் சேர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினி புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கிறார். இதோ அந்த அழகிய புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

rajini

Leave a Comment

Exit mobile version