படப்பிடிப்பு தளத்தில் தன்னை மறந்து தூங்கிய சூப்பர் ஸ்டார் ரஜினி.? எந்த படத்தில் தெரியுமா.?

சினிமா உலகில் இன்று உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர், நடிகைகள் பெரும்பாலும் படக்குழுவினர் சொல்லும் நேரத்திற்கு சரியாக வருவார்கள் ஒரு சிலர் முன்கூட்டியே வருவது வழக்கம் அந்த வகையில் சிவாஜியை தொடர்ந்து ரஜினி அதை தொடர்ந்து இப்பொழுது வரை பின்பற்றி வருகிறார் ஆம் பட குழுவினர் சொல்லும் நேரத்திற்கு முன்பாகவே ஷுட்டிங் ஸ்பாட்டிற்கு ரஜினி வருவது வழக்கம்

அப்படி ஒரு படத்திற்காக முன்கூட்டியே வந்து ரஜினி தூங்கியது பட குழுவினருக்கு ஆச்சரியத்தை கொடுத்துள்ளது அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. மறைந்த காமெடி நடிகரும், தயாரிப்பாளரும், இயக்குனருமான மனோபாலா ரஜினியை வைத்து ஊர்காவலன் என்னும் படத்தை எடுத்தார் இந்த படத்தின் பெரும்பாலான ஷூட்டிங் மைசூரில் எடுக்கப்பட்டது

ஒரு தடவை ஒரு பாடலுக்காக படகுழு லொகேஷனை மாற்றியது அங்கு ரஜினி முன்கூட்டியே வந்து உட்கார்ந்திருந்தாராம் ஆனால் அப்பொழுது பட குழுவினர் தொடங்கிய நடிகர் நடிகைகள் யாருமே வரவில்லையாம் இதனால் உட்கார்ந்திருந்த ரஜினி ஒரு கட்டத்திற்கு மேல் படுத்து தூங்கி விட்டார். அந்த அளவிற்கு அந்த இடத்தில் இயற்கையை அழகாக இருந்ததாம் ரொம்ப நேரம் தூங்கிய ரஜினியை பட குழுவினர் வந்து கூப்பிட்டு

எங்களை மன்னித்து விடுங்கள் என கூறினார் இதற்கு ரஜினி பரவாயில்லை சினிமாவில் இதெல்லாம் ஒரு சகஜம் என்பது போல அவரும் ஒன்னும் சொல்லாமல் பாடலுக்கு நடனமாக ரெடியாகிவிட்டாராம் அப்படியே உருவான பாடல் தான் மாசி மாசம் தான் கெட்டி மேளதாளம் தான் என்ற பாடல் உருவானது என கூறப்படுகிறது இந்த தகவல் தற்போது ரஜினி ரசிகர்கள் மத்தியில் காட்டு தீ போல பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment