கடந்த வருடம் சின்னத்திரை நடிகை சித்ராவிற்கு நடந்த சூப்பர் விஷயம்.! புகைப்படத்தை இப்பொழுது வெளியிட்டு வருத்தப்படும் அவரது ரசிகர்கள்.!

சின்னத்திரை நடிகைகள் பலரும் தற்பொழுது விதவிதமான போட்டோ ஷூட் புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறார்கள் ஆனால் இன்றும் ரசிகர்கள் மனதில் மறக்க முடியாத சின்னத்திரை நடிகை என்றால் அது சித்ராதான் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் ஒரு சில காரணங்கள் குறித்து மறைந்துவிட்டார்.

சின்னத்திரை சீரியல்களில் இவர் நடித்துக் கொண்டிருந்த பொழுது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மிகவும் புகழ்பெற்று விளங்கியது அதிலும் குறிப்பாக முல்லை கதாபாத்திரத்தில் இவர் நடித்து வந்ததால் மக்கள் பலரும் இந்த சீரியலை மிகவும் விரும்பி பார்ப்பார்கள் சீரியல் மட்டுமல்லாமல் பல நிகழ்ச்சிகளையும் தொகுப்பாளினியாக இருந்து தொகுத்து வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் பார்த்தால் இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியை பார்ப்பதற்காகவே ஒரு தனி ரசிகர் கூட்டம் இருக்கிறார்கள் இவரை மறக்க முடியாமல் இவரது ரசிகர்கள் தற்போதும் இவரது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.இவரது பிறந்தநாள் வந்த பொழுது கூட இவரது ரசிகர்கள் பலரும் இவரது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வந்தார்கள் அதுமட்டுமல்லாமல் இவர் நடித்த கால்ஸ் திரைப்படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இவரை மறக்க முடியாமல் இவரது ரசிகர்கள் இவர் இருக்கும் பொழுது நடந்த விஷயங்களை சமூக வலைதள பக்கங்களில் நினைவுகூர்ந்து வருகிறார்கள் அப்படி கடந்த வருடம் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி நடிகை சித்ராவிற்கு அவரது ரசிகர்கள் ஒரு கொடி டிசைன் அறிமுகப்படுத்தினார்கள் அதனை சித்ராவே திறந்துவைத்தார் என்று கூட கூறலாம்.

vj chithra
vj chithra

ஆம் அந்த புகைப்படங்களை இவரது ரசிகர்கள் தற்போது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டு வருத்தப்பட்டு வருகிறார்கள் இவர் மட்டும் இப்பொழுது இருந்தால் நிறைய திரைப்படங்களில் நடித்து இருப்பார் என கூறி கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

Leave a Comment