இந்த திரைப்படம் தான் சூப்பர் ஸ்டாருக்கு கடைசி படமா.? ரசிகர்களுக்கு ஷாக் ஆன தகவல்.?

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக நீண்டகாலமாக வலம் வருபவர் ரஜினிகாந்த் இவர் வயதானாலும் அதே ஸ்டைல், அதே லுக், அதே சுறுசுறுப்பு என அசத்தலாக நடித்து வருகிறார். இவரின் நடிப்பு இளம் நடிகர்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் இருக்கிறது. கடைசியாக ரஜினிக்கு தர்பார் திரைப்படம் ரிலீஸ் ஆகியது இந்த திரைப்படத்தை ஏ ஆர் முருகதாஸ் இயக்கி இருந்தார்.

இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார், இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது, படத்தில் கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பூ, சூரி, சதீஷ் நயன்தாரா என பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகிறார்கள்.

அதுமட்டுமில்லாமல் படத்திற்கு இமான் இசையமைத்து வருகிறார், கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் படப்பிடிப்பு அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளது, மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பிய பிறகே படப்பிடிப்பு தொடங்கும் என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அதிரடியாக கூறிவிட்டார் அதனால் இந்த திரைப்படம் அடுத்த வருடம் தான் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில் இந்த திரைப்படத்திற்கு பிறகு அரசியல் பயணத்தில் ஈடுபடுவதற்காகவும் உடல்நிலையில் அதிக கவனம் செலுத்துவதற்காகவும் திரைப் பயணத்தை முடித்துக் கொள்ள இருப்பதாக ரஜினி முடிவு செய்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இதனால் ரஜினி ரசிகர்கள் கொஞ்சம் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்.

ஆனாலும் ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி என்றால் எப்படியாவது தமிழக அரசியலில் மாற்றம் ஏற்படும் எனவும் அவர்கள் கூறி வருகிறார்கள், எப்படி சினிமாவில் ரஜினி முன்னணியில் இருக்கிறார் அதேபோல் அரசியலிலும் முன்னணி இடத்தில் வந்து ஜொலிப்பார் என கூறுகிறார்கள். ரஜினியின் முழுநேர அரசியல் பிரவேசம் எப்பொழுது என கேட்டுக்கொண்டிருந்த பலருக்கு இது மகிழ்ச்சியான செய்திதானே.

இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை முழு நேர அரசியல் பிரவேசம் ரஜினி எடுக்கும் வரை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Leave a Comment