சார்பட்டா பரம்பரை படத்தை தொடர்ந்து மாறுபட்ட ஒரு கதை உருவாக்கிய பா ரஞ்சித் அவர் கூறிய சூப்பர் செய்தி.

இயக்குனர் பா. ரஞ்சித் மெட்ராஸ் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரஜினியை வைத்து கபாலி, காலா போன்ற அடுத்தடுத்த சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார். அதன் பிறகு சிறந்த இயக்குனர் என்ற அந்தஸ்தை உடனே தன் வசப்படுத்தினார் தற்பொழுது ஆர்யாவை வைத்து சார்பட்டா பரம்பரை என்ற திரைப்படத்தை எடுத்து முடித்துள்ளார்.

இந்த திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளிவந்து பலரையும் ஆச்சரியப்படுத்தியது இதில் ஆர்யாவின் நடிப்பு வேற லெவெலில் இருக்கிறது என பலரும் தற்போது பேசி வருகின்றனர்.

இந்த படம் நிச்சயம் ஆர்யாவையும், பா. ரஞ்சித்தையும் வேற ஒரு லெவலுக்கு எடுத்துச் செல்லும் என கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பா ரஞ்சித் அடுத்ததாக ஒரு புதிய படத்தை எடுக்க உள்ளார் இது குறித்து சமீபத்தில் பேசியும் உள்ளார் அவர் கூறியது.

தனது அடுத்த படம் நட்சத்திரம் நகர்கிறது என்று கூறியுள்ளார் இது காதல் கதை என்றும் அட்டகத்தி படத்திற்கு பிறகு நான் எடுக்கும் காதல் கதை என்று கூறியிருந்தார். இதனால் ரசிகர்கள் தற்போது அந்த படத்தை பார்க்க தற்போது ரசிகர்கள் மிகப்பெரிய ஆவலுடன் காத்து கிடக்கின்றனர்.

சிறந்த படைப்புகளை கொடுத்தவரும் பா ரஞ்சித் இருக்கு சினிமா உலகில் இன்னும் 10 ஆண்டுகளுக்கு நல்ல மவுசு இருக்கும் என பார்க்கப்படுகிறது அந்த அளவிற்கு வித்தியாசமான படங்களை கொடுத்து மக்களுக்கு நல்ல புத்துணர்ச்சி கொடுத்து வருகிறார்

Leave a Comment