நீண்ட வருடத்திற்கு பிறகு தான் தயாரிக்கும் 90 வது படத்தை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டது சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம்.!

1988 ஆம் ஆண்டு படத்தை தயாரிக்க ஆரம்பித்தது சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் இதனை ஆர்பி சவுத்ரி நிர்வகித்தார். இவர் நடிகர் ஜீவாவின் அப்பா ஆவார். ஒரு காலத்தில் பல திரைப்படங்களை தயாரித்துள்ளது சூப்பர் குட் பிலிம்.

சொல்லப்போனால் பல முன்னணி நடிகர்களான விஜயகாந்த், சரத்குமார், பிரபு தேவா, விஜய் என பல முன்னணி நடிகர்களின் திரைப்படத்தை தயாரித்துள்ளது, ஆனால் ஒரு காலகட்டத்தில் இந்த நிறுவனம் எந்த ஒரு திரைப்படத்தையும் தயாரிக்கவில்லை கடைசியாக 2017 ஆம் ஆண்டு மொட்டசிவாகெட்டசிவா திரைப்படத்தையும் கடம்பன் திரைப்படத்தையும் தான் தயாரித்திருந்தது.

அதன்பிறகு எந்த ஒரு திரைப்படத்தையும் தயாரிக்காமல் மூன்று வருடங்களாக எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல் இருந்து வந்தது இந்த நிலையில் 2020 இல் முதன் முறையாக படத்தை தயாரிக்கப் போகிறோம் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம்.

சூப்பர்  குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் தன்னுடைய 90ஆவது திரைப்படத்திற்கு களத்தில் சந்திப்போம் என பெயர் வைத்துள்ளார்கள் இந்த திரைப் படத்தில் ஹீரோவாக ஜீவா மற்றும் அருள்நிதி இணைந்துள்ளார்கள்.

இவர்கள் இருவரும் முதன்முறையாக இந்த திரைப்படத்தில் தான் இணைய இருக்கிறார்கள் படத்தை இயக்க இருக்கிறார் ராஜசேகர். இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை 6 மணிக்கு அறிவிக்க இருப்பதாக தகவல் வெளியாகியது.

அதன்படி இன்று மாலை 6 மணிக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் அதாவது களத்தில் சிந்திப்போம் படத்தின் டீசர் வருகின்ற திங்கள் கிழமை வெளியாகும் என அறிவித்துள்ளார்கள்.

kalaththil sandhipom
kalaththil sandhipom

Leave a Comment