திரையரங்கில் நின்னு பேசிய சுந்தர் சியின் 8 வெற்றி திரைப்படங்கள்..! இதுல ரஜினி கமல் கூட இருக்காங்களே..!

தமிழ் திரை உலகில் இயக்குனர் மணிவண்ணன் அவர்களின் உதவி இயக்குனராக பணிபுரிந்து அவர்களின் வித்தைகளை கற்றுக்கொண்ட சுந்தர்சி அதன்பிறகு இயக்குனராக பல்வேறு திரைப்படங்களை இயக்கியுள்ளார் அந்த வகையில் இவர் முறைமாமன் என்ற திரைப்படத்தை இயக்கி தலைநகரம் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக கால்தடம் பதித்தார்.  இவ்வாறு பிரபலமான நமது இயக்குனர் தமிழ் சினிமாவில்  பல்வேறு வெற்றி திரைப்படங்களை இயக்கியுள்ளார் அவைகளைப் பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

முறைமாமன் என்ற திரைப்படத்தை இயக்குனர் சுந்தர் சி அவர்கள்தான் இயக்கியிருந்தார் இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக ஜெயராம்  மற்றும் நாயகியாக குஷ்பு நடித்திருந்தார் மேலும் காமெடி கதாபாத்திரத்தில் கவுண்டமணி செந்தில் மனோரமா நடித்த இத்திரைப்படம் முழுக்க முழுக்க நகைச்சுவையை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டது.

mura mappillai

உள்ளத்தை அள்ளித்தா இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடிகர் கார்த்திக் நடித்து இருப்பார் கதாநாயகியாக ரம்பா மற்றும் காமெடி கதாபாத்திரத்தில் செந்தில் கவுண்டமணி நடித்த இத்திரைப்படமும் ஒரு காமெடி கலந்த காதல் திரைப்படம் ஆகும்.

ullaththai allitha

மேட்டுக்குடி திரைப்படமானது கார்த்திக் நக்மா நடிப்பில் வெளியான திரைப்படம் திரைப்படத்தில் கவுண்டமணி மணிவண்ணன் ஜெமினி கணேசன் போன்ற பல்வேறு நடிகர்கள் நடித்து இருந்தார்கள் மேலும் இத்திரைப்படம் திரையரங்கில் சுமார் 75 நாட்களுக்கு மேலாக ஓடி சாதனை படைத்தது.

mettukudi

அருணாச்சலம் திரைப்படம் ஆனது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான திரைப்படமாகும் அதுமட்டுமில்லாமல் ரஜினியின் வெற்றிப் படங்களில் இதுவும் ஒன்றாக கருதப்படுகிறது. மேலும் இத்திரைப்படம் சுமார் 30 நாளில் மட்டும் 300 கோடி செலவு செய்தால் 3,000 கோடி கிடைக்கும் என்பதை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமாகும்.

arunachalam

அன்பே சிவம் திரைப்படமானது கமல் மற்றும் மாதவன் நடிப்பில் உருவான இத்திரைப்படம் ஆனது ரசிகர்களை கண்ணீர் விடும் அளவிற்கு இத்திரைப்படத்தின் கதை அமைந்தது. அதுமட்டுமில்லாமல் இத்திரைப்படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு வசனமும் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

anbe sivam

வின்னர் திரைப்படமானது பிரசாந்த் மற்றும் திறன் ஆகியவர்கள் இணைந்து நடித்த திரைப்படம் ஆகும் இந்த திரைப்படத்தில் வடிவேலு விஜயகுமார் நம்பியார் போன்ற பல்வேறு பிரபலங்கள் நடித்துள்ளார்கள்.  என்னதான் இந்த திரைப்படத்தில் கதாநாயகனுக்கு நல்ல கதாபாத்திரம் கொடுத்திருந்தாலும் வடிவேலு நடித்த கைப்புள்ள கதாபாத்திரம் ரசிகர்களால் பெரிதும் பேசப்பட்டது.

vinnar

இதனை தொடர்ந்து கலகலப்பு மற்றும் அரண்மனை ஆகிய திரைப்படங்களை இயக்கிய சுந்தர் சி அவர்கள் இந்த இரண்டு திரைப்படங்களும் நல்ல வசூலையும் வெற்றியையும் பெற்றுக் கொடுத்தது.  இவ்வாறு ஆரம்பத்தில் காமெடி கலந்த திரைப்படத்தை இயக்கி வந்த நமது சுந்தர் சி தற்போது காமெடியுடன் கலந்த திகில் திரைப்படத்தை உருவாக்கி வருகிறார்.

Leave a Comment

Exit mobile version