கார்த்திக்கின் மெகா ஹிட் திரைப்படத்தில் கை வைக்கும் சுந்தர் சி..! இது விளங்குமா விளங்காதானு தெரியலையே..?

தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர் மட்டும் நின்று இயக்குனராகவும் தன்னுடைய திறனை வழிகாட்டி வருபவர்தான் சுந்தர் சி இவ்வாறு பிரபலமான நமது நடிகர் நடிகை குஷ்புவின் கணவர் என்பது  நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் இவர் தமிழ் சினிமாவில் பல்வேறு பேய் திரைப்படங்களை  நகைச்சுவையாக கொடுத்து வருகிறார்.

அந்த வகையில் சுந்தர்சி அவர்கள் கவுண்டமணியை வைத்து பல்வேறு திரைப்படங்களை எடுத்துள்ளார் அதில் கார்த்தி கவுண்டமணி ரம்பா ஆகியோர் நடிப்பில் 1996 ஆம் ஆண்டு வெளியான உள்ளத்தை அள்ளித்தா என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார் இந்த திரைப்படம் முழுக்க முழுக்க நகைச்சுவையாக எடுக்கப்பட்ட திரைப்படமாகும்.

மேலும் மாபெரும் வரவேற்பு பெற்ற இந்த திரைப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய சாதனை படைத்தது மேலும் இந்த திரைப்படம் திரையரங்கில் மிக பிரமாண்டமாக ஓடிக் கொண்டிருக்கும் பொழுது மணிவண்ணன் கார்த்திக் கவுண்டமணி ஆகியோர்கள் ஒன்றாக இணைந்து இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கலாம் என சுந்தர் சி கூறியிருந்தார் இதைக் கேட்டவுடன் கார்த்திக் ஆர்வமாக இருந்தாராம்.

அந்த வகையில் இந்த திரைப்படத்தின் ஓப்பனிங் சீனில் நடிகை ரம்பாவிற்கு மாலை போட்டிருப்பது போல் காட்சி அமைக்க நினைத்தாராம் சுந்தர் சி ஏனென்றால் ஒரு கார் விபத்தில் ரம்பா அவர்கள் இறந்து விடுவதாகவும் அதை தாங்க முடியாமல் கார்த்திக் அவர்கள் அமெரிக்கா செல்வது போன்ற காட்சிகள் அமைக்கப்பட இருந்தது.

மேலும் ஜெயிலில் இருந்து வெளியே வரும் மணிவண்ணன் அவர்கள் ஒரு கலைக்கூட்டம் பெண்ணான ரம்பாவை பார்க்கிறார் இவர் இந்த கதையை கேட்டவுடன் எல்லோருக்கும் பிடித்து விட்டது ஆனால் மிகப் பிரமாண்டமாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த திரைப்படத்தின் அடுத்த பாகம் சொதப்பி விடக்கூடாது என இந்த முயற்சி சுந்தர் சி கை விட்டு விட்டாராம்.

மேலும் இதுவரை யாரிடமும் சொல்லாத இந்த கதையை சமீபத்தில் பேட்டி ஒன்றில் சுந்தர் சி அவர்கள் பகிர்ந்துள்ளார்.

Leave a Comment