மீண்டும் காமெடி கதையை கையில் எடுக்கும் சுந்தர் சி.! அட நம்ம ஆளுதான் ஹீரோவா அப்போ படம் வேற லெவல்

sundar c movie : நடிகர் மற்றும் இயக்குனருமான சுந்தர்சி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்புகலகலப்பு 2 என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார். இந்த திரைப்படத்தில் நடிகர் ஜீவா, ஜெய், சிவா, கேதரின் தெரசா, நிக்கி கல்ராணி, நந்திதா ஸ்வேதா, ராதாரவி, சதீஷ் யோகி பாபு ரோபோ சங்கர் என ஒரு பெரிய பட்டாளமே இந்த திரைப்படத்தில் நடித்திருந்தது அனைவரும் அறிந்ததே.

இயக்குனர் சுந்தர் சி கலகலப்பு 2 காமெடி திரைப்படத்திற்குப் பிறகு நடிகர் விஷாலை வைத்து ஆக்ஷன என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார்.மேலும் இதை தொடர்ந்து தற்போது இவர் அரண்மனை 3 என்ற படத்தை எடுத்துக்கொண்டிரக்கிறார். இந்த திரைப்படத்தில் ஆர்யா, ராசி கண்ணா, ஆண்ட்ரியா போன்றோர் நடித்துக் கொண்டிருக்கின்றனர்.

அந்த படப்பிடிப்பு முடிந்த பிறகு அதை தொடர்ந்து நடிகர் ஜெய்யை வைத்து ஒரு நகைச்சுவை திரைப்படத்தை இயக்க உள்ளதாக கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் அந்த திரைப்படத்தை அவரே தனது அவ்னி சினிமாக்ஸ் பேனரின் கீழ்  தயாரிக்கப் போவதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் அவர் எடுக்கப்போகும் நகைச்சுவை திரைப்படத்தில்  அவரே ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கப் போவதாகவும் கூறப்படுகிறது.

jai
jai

Leave a Comment