இரட்டை வேடத்தில் களம் இறங்கும் ரோஜா கதாபாத்திரம்.! ரோஜா சீரியலில் அதிரடி திருப்பம்..

கடந்த 25 வருடங்களாக ஏராளமான சீரியல்களை ஒளிபரப்பி ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்து வரும் தொலைக்காட்சி தான் சன் டிவி. சின்னத்திரையில் டாப் தொலைக்காட்சியாக சன் டிவி விளங்குகிறது. மேலும் இந்த சீரியலில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

அந்த வகையில் 1000 எபிசோடுகளை தாண்டியும் கொஞ்சம் கூட சுவாரசியம் குறையாமல் மிகவும் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் ரோஜா. இந்த சீரியல் படத்தை ஓவர் டேக்ஸ் செய்யும் அளவிற்கு மிகவும் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. மேலும் இந்த சீரியலில் பல முன்னணி நட்சத்திரங்களும் நடித்து வருகிறார்கள்.

இதன் காரணமாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருவதால் தொடர்ந்து டிஆர்பி-யில் முன்னணி வகித்து வருகிறது. இவ்வாறு இந்த சீரியல் மிகவும் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருப்பதற்கு முக்கிய காரணம் இந்த சீரியலின் கதாநாயகன் மற்றும் கதாநாயகி தான்.

தற்போது இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்த வரும் ரோஜா கேரக்டர் இரட்டை வேடங்களில் களமிறங்கிவுள்ளது. இந்த சீரியலின் கதை படி தற்போது ரோஜா கடலில் விழுந்தது தெரியாமல் அர்ஜுன் அவரை தேடி வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் ரோஜா காணாமல் போனதை எப்படி வீட்டில் மறைப்பது என்று அர்ஜுன் யோசித்து வந்த நிலையில் தற்பொழுது ஜெஷிகா என்பவரை அறிமுகப்படுத்தியுள்ளார்கள்.

எனவே அர்ஜுன் ரோஜாவை போல ஜெஷிகாவை நடிக்க வைக்க முடிவு செய்துள்ளார். பிறகு கடலில் விழுந்த ரோஜா சிலரால் காப்பாற்றப்பட்டு சிகிச்சை அளித்து வருவது போல இந்த சீரியலின் கதை காலம் அமைந்துள்ளது. இந்நிலையில் ரோஜா கதாபாத்திரத்தில் நடித்துவரும் பிரியங்கா நால்காரி இதற்கு மேல் இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.

Leave a Comment