நான் தான் கபிலன் என கயலிடம் உண்மையை உடைக்க இருக்கும் எழில்.!

சின்னத்திரையில் தற்பொழுது உள்ள அனைத்து தொலைக்காட்சிகளையும் ஓவர் டேக் செய்து டிஆர்பி_யில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான செய்திகள் முன்னணி வைத்து வருகிறது. சில காலங்களுக்கு முன்பு சன் டிவி மற்றும் விஜய் டிவியின் சீரியல்கள் டிஆர்பி-யில் போட்டி போட்டு வந்த நிலையில் சமீப காலங்களாக எந்த ஒரு போட்டியும் இல்லாமல் கயல் சீரியல் டிஆர்பி ரேட்டிங் முதலிடத்தை பிடித்து வருகிறது.

இந்த சீரியல் அறிமுகமான முதல் வாரத்திலேயே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது என்று தான் கூற வேண்டும் இந்த சீரியல் என் கதைகளும் மிகவும் விறுவிறுப்பாக இருந்து வருவதால் மக்கள் மத்தியில் எளிதில் பிரபலமானது. இந்த சீரியலில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த யாரடி நீ மோகினி சீரியலில் வில்லியாக நடித்த சைத்ரா ரெட்டி  ஹீரோயினாக நடித்த வருகிறார்.

இவர் யாரடி நீ மோகினி சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது இந்த சீரியலின் வெற்றிக்கு வரும் ஒரு முக்கிய காரணம் என்று கூறலாம்.  நர்சாக பணிபுரியும் கயல் ஒரு நடுர குடும்பத்தில் பிறந்தவர். தனது தம்பி தங்கைகளை கவனித்துக் கொள்ள வேண்டும் மேலும் குடும்பத் தலைவராகவும், தைரியமான பெண்ணாகவும் இருக்கிறார்.

இவரைத் தொடர்ந்து எழில் என்ற கதாபாத்திரத்தில் ஹீரோவாக நடிகர் சஞ்சீவ் கார்த்திக் நடித்து வருகிறார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ராஜா ராணி சீரியலின் மூலம் புகழ்பெற்றார். இந்நிலையில் தற்பொழுது கயலிடம் எழில் கபிலன் என்ற பெயரில் நண்பராக நடத்து வருகிறார்.

கயலிடம் இவர் காதலை சொல்லியும் இதனை கயல் மறுத்ததால் மீண்டும் கயலிடம் பழக கபிலன் என்ற நண்பராக எழில் அறிமுகமாகிறார். இப்போது வரை அப்படித்தான் கயலிடம் பழகி வருகிறார். தேவியின் கல்யாணம் பிரச்சனை இல்லாமல் முடிய கபிலனாக எழில் ஏகப்பட்ட உதவிகளை செய்கிறார்.

இந்நிலையில் இன்னும் சில நாட்களில் கபிலன் யார் என்ற உண்மையை எழில் சொல்ல இருப்பதாக தகவல் இணையதளத்தில் கசத்துள்ளனர் அதாவது கபிலனாக பழகுவது நான் தான் என்ற உண்மையை கூற இருக்கிறாராம். இதனால் முக்கியத்துவம் ஏற்பட இருக்கிறது.

Leave a Comment