டிஆர்பிக்காக ரொமான்ஸில் எல்லை மீறும் சன் டிவி.! விட்டா பிட்டு படத்தையே ஓவர் டேக் செய்திடுவாங்க போல..

ஒரு காலகட்டத்தில் இழுத்துப் போத்திக் கொண்டு நடிக்கும் நடிகைகளை வைத்து ஏராளமான சீரியல்களை ஒளிபரப்பாகி வந்த சன் டிவி தற்போது ரொமான்ஸில் எல்லை மீறும் காட்சிகளை வைத்து வருவது ரசிகர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்திவுள்ளது.

அதாவது 90 காலகட்டத்தில் கோலங்கள், மெட்டிஒலி, சித்தி என குடும்ப சீரியல்கள் பலவகை சூப்பர் ஹிட்டானது. சொல்லப்போனால் தொடர்ந்து சன் டிவியில் இழுத்துப் போத்திக் கொண்டும் நடிக்கும் நடிகைகளை வைத்து தான் ஏராளமான சீரியல்கள் ஒளிபரப்பாகி வந்தது அந்த வகையில் அனைத்து சீரியலும் சூப்பர் ஹிட்டானது.

இப்படிப்பட்ட நிலையில் சில காலங்களாக அதிக ரொமான்ஸ் இருக்கும் சீரியல்கள் மற்றும் புதிதாக இளம் நடிகர் நடிகைகளை அறிமுகப்படுத்தி வந்தார்கள்.2k கிட்ஸ்களின் மத்தியில் பிரபலமடைய வேண்டும் என்பதற்காக கவர்ச்சியின் உச்சத்தை காட்டி வருகிறார்கள்.

இவ்வாறு பிரைன் டைமில் இரவு 8:30 மணி அளவில் குடும்பத்துடன் உட்கார்ந்து பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் கண்ணான கண்ணே நெடுந்தொடர். இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.பல பிரச்சனைகளுக்குப் பிறகு காதலித்து திருமணம் செய்து கொண்ட கதாநாயகன் மற்றும் கதாநாயகி இருவரும் ரொமான்ஸில் எல்லை மீறிய காட்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது.

இவ்வாறு இதனை பார்க்கும் ரசிகர்கள் பிட்டு படத்தை விட மிகவும் மோசமான காட்சிகள் இருப்பதாக கூறி வருகிறார்கள். மேலும் குடும்பத்துடன் பார்க்கும் நேரத்தில் முகம் சுளிக்கும்படியான காட்சிகள் இருப்பது மிகவும் மோசமான ஒன்று என்றும் குழந்தைகள் இதனை பார்ப்பதனால் அவர்களுடைய மனதில் தேவையில்லாத எண்ணங்கள் தோன்றும் இன்றும் கூறி வருகிறார்கள்.

இவ்வாறு பலரும் இந்த சீரியலுக்கு கண்டனத்தை தெரிவித்து வரும் நிலையில் சுமார் 500 எபிசோடுகளுக்கு மேலாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது கண்ணான கண்ணே சீரியல். இந்த சீரியலில் தனது மனைவியுடன் அன்பாக வாழ்ந்து வரும்

kannana-kanne
kannana-kanne

இதனால் அந்த குழந்தை துரதிர்ஷ்டசாலி எனக் கருதிய அந்த நபர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்கிறார். இவ்வாறு அந்தப் பெண் குழந்தை தனது அப்பா பாசத்திற்காக ஏங்க தனது அப்பாவின் மனதை மாற்ற வேண்டும் என நினைக்கிறார்.

இவ்வாறு அப்பாவின் மீது வைத்திருக்கும் மகளின் பாசம் ஜெயிக்குமா என்பதை மையமாக வைத்து தான் ஒளிபரப்பாக தொடங்கியது. இவ்வாறு அப்பா பாசம் கிடைக்காத நேரத்தில் தனது கணவரிடம் அந்த பாசம் கிடைக்கும் பொழுது பெரும் மகிழ்ச்சியடைகிறாள் அந்தப் பெண்.

Leave a Comment