ரசிகர்களை புல்லரிக்க வைக்கும் ஜீவானந்தத்தின் என்ட்ரி.! கதிரை கதறவிட்ட நந்தினி.. குணசேகரனின் நிலைமை என்ன?

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த வரும் நிலையில் நாளுக்கு நாள் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. ஜனனி ஜீவானந்தத்தை தேடி வரும் நிலையில் இந்த நாடகத்தின் இயக்குனர் திருச்செல்வம் தான் ஜீவானந்தமாக நடித்துள்ளார் என்பது ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது.

விரைவில் என்ட்ரி கொடுக்க இருக்கும் நிலையில் அதற்காக ரசிகர்கள் காத்து வருகின்றனர். ஜனனி எப்படியாவது அந்த ஜீவானந்தத்தை கண்டுபிடித்து குணசேகரன் நினைத்த அனைத்து சதிகளையும் வீணாக்க இருக்கிறார் இதன் மூலம் குணசேகரனுக்கு சரியான பாடம் புகட்ட இருக்கிறது.

இவ்வாறு இவர் மூலம்தான் வீட்டில் மருமகளுக்கு நல்ல வழி கிடைக்கப் போகிறது. மேலும் குணசேகரனின் சதி திட்டத்தை சூதனமாக கணித ஜனனி அப்பாதா தங்கி இருக்கும் ரூமிலல் சிசிடிவி கேமராவை பொருத்தி உள்ளார் எனவே ஆடிட்டர் அப்பத்தாவிடம் கைரேகை வாங்குவது குறித்த வீடியோ அதில் பதிவானால் குணசேகரனின் முகத்திரை அனைவரும் முன்பும் வெளிப்பட இருக்கிறது.

இதனையடுத்து இதுவரையிலும் கதிரை எதிர்த்து பேசாமல் இருந்து வந்த நந்தினி திடீரென்று தொடர்ந்து கதிரை வாய் திறக்காத அளவிற்கு அசிங்கப்படுத்தி வருகிறார். அதேபோல் ரேணுகாவும் குணசேகரனை அசிங்கப்படுத்திய வரும் நிலையில் அனைவரும் இணைந்து எப்படியாவது ஆதிரை கரிகாலனின் திருமணத்தை தடுத்து நிறுத்த போகிறார்கள்.

தற்பொழுது திருச்செல்வம் மாசான என்ட்ரி கொடுத்திருக்கும் நிலையில் ஒருபுறம் ஜனனி அவரை தேடி அலைந்து கொண்டிருக்கிறார் இவ்வாறு திருச்செல்வத்தின் என்ட்ரி மூலம் இந்த கதையில் பெரிய டுவிஸ்ட் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்பொழுது திருச்செல்வம் அஜித்தின் மங்காத்தா மாஸ் மியூசிக் உடன் என்ட்ரி கொடுத்திருக்கும் ப்ரோமோ இதோ..

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment