நாளைக்கு நடக்க இருக்கிற திருமணத்தை நடக்க விடாமல் செய்து விடுவேன் என குணசேகரனை மிரட்டும் சாருபாலா.! அப்பத்தாவிடம் ஆசிர்வாதம் வாங்கும் ஆதிரை..

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் தற்போது ஆதிரை, அருண் திருமணம் நடைபெறுமா என்ற எதிர்பார்ப்புடன் கதைகளம் நகர்ந்து கொண்டிருக்கிறது. குணசேகரன் எப்படியாவது ஆதிரைக்கும் கரிகாலனுக்கு திருமணம் செய்துவிட்டு அப்பத்தாவின் 40% சொத்தை ஆட்டையை போட வேண்டும் என்ற முயற்சியில் இருந்து வருகிறார்.

இவ்வாறு குணசேகரன் திட்டத்தை முறியடிக்க வேண்டும் என ஜனனியும் பல முயற்சிகளை செய்து வருகிறார். குணசேகரன் அதிரை கரிகாலன் திருமணத்திற்காக வெளியில் சென்ற உடன் நீங்கள் வந்து அப்பத்தாவிடம் கைரேகை வாங்கிக் கொள்ளுங்கள் என கூறியிருக்கிறார் எனவே இப்படி ஏதாவது தில்லாலங்கடி வேலை குணசேகரன் செய்வான் என்று தெரிந்துக் கொண்ட ஜனனி சிசிடிவி கேமராவை பொருத்தியுள்ளார்.

மேலும் ஆதிரை அருண் திருமணத்தை இன்று நடத்தி வைப்பதாக ஜனனி விசாலாட்சியிடம் கூறி இருக்கும் நிலையில் அவரை ஆசிர்வாதம் செய்து தங்களுடன் அனுப்பி வைக்க வேண்டும் என கூறுகிறார். விசாலாட்சி இதனைக் கேட்டவுடன் அதிர்ச்சி அடைய குணசேகரன் ஏதாவது செய்து விடுவானோ என பயப்படுகிறார்.

இந்நிலையில் தற்பொழுது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ஜனனி, விசாலாட்சி, ஆதிரை ஆகியோர் அப்பத்தாவின் ரூமுக்குள் வந்துள்ள நிலையில் விசாலாட்சி உங்க பேத்திக்கு அருணோட கல்யாணம் நடக்க போகுது ஆசிர்வாதம் பண்ணுங்க என கேட்கிறார். மறுபுறம் குணசேகரன், ஞானம், கதிர் ஆகியோர்கள் எஸ்கேஆர் கம்பெனிக்கு சென்றுள்ளன நிலையில் கதிர் ஓவராக பேச கடுப்பான சாருபாலா அமைதியா இருங்க என சொல்ல இல்லனா என்ன பண்ணுவீங்கன்னு கதிர் கேட்கிறார்.

அதற்கு நாளைக்கு நடக்கப்போற கல்யாணத்தை நடக்க விடாமல் பண்ணிடுவேன் என சாருபாலா கூற குணசேகரன் அதிர்ச்சி அடைகிறார் இவ்வாறு குணசேகரன் மற்றும் கதிரை இதனை வைத்து வாயை மூட வைக்கிறார். இதோடு இந்த ப்ரோமோ நிறைவடைகிறது..

Leave a Comment