குணசேகரன் செய்ய இருக்கும் தில்லுமுல்லு வேலையை கண்டுபிடிப்பதற்காக ஜனனி எடுத்த அதிரடி முடிவு.! 40% ஷேர் நாசமா போச்சு..

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியலான எதிர்நீச்சல் சீரியலில் தற்பொழுது அப்பத்தா சொன்ன ஜீவானந்தம் யார் என்பதை கண்டுபிடிக்க முயற்சியில் ஜனனி தீவிரமாக இறங்கியுள்ளார். இடையில் கண்வழித்த அப்பத்தா ஜனனியிடம் ஜீவானந்தத்தை கண்டுபிடிப்பதற்காக நிச்சயதார்த்தம் மண்டபத்திற்கு செல்லுமாறு கூறுகிறார்.

எனவே ஜனனி மறுநாள் ஜீவானந்தத்தை கண்டுபிடிப்பதற்காக நிச்சயதார்த்த மண்டபத்திற்கு சக்தியுடன் போக தயாராகிறார். இதற்கிடையில் குணசேகரன் வழக்கம்போல் அனைவரையும் அமர வைத்து மாநாடு நடத்த சக்தியிடம் பேசுவதற்கு கீழே வருமாறு சொல்கிறார் எனவே சக்தி, ஜனனி இருவரும் கீழே வந்தவுடன் கதிர் எப்பொழுதும் போல் ஓவராக ஆட்டம் போடுகிறான்.

ஆனால் சக்தி எதுவும் பேசாமல் மிகவும் அமைதியாக இருக்கும் நிலையில் பிறகு கதிர் தேவையில்லாததை பேசி சண்டை போடுகிறார். அதேபோல் குணசேகரன் எப்பொழுதும் போல கதிரை ஏத்திவிட்டு மற்றவர்களை திட்ட வைத்து வேடிக்கை பார்க்கிறார். இதனை அடுத்து கல்யாணத்தில் யாரும் மூலமாக பிரச்சனை வருகிறதோ அவர்கள் என்னுடைய உண்மையான சுய ரூபத்தை பார்க்க வேண்டும் என்பது போல் சக்தியையும், ஜனனியும் எச்சரிக்கிறார்.

இந்த நேரத்தில் குணசேகர்ணை பார்ப்பதற்காக ஆடிட்டர் வீட்டிற்கு வர எல்லா பேப்பரும் சரியாக இருக்கிறதா என கேட்கிறார். பிறகு ஜனனி, சக்தியை வெளியே அனுப்பி ஒவ்வொருவராக அந்த இடத்தில் இருந்து காலிப்பு செய்ய வைக்கிறார் எனவே இதனால் ஜனனிக்கு ஏதோ ஒரு தில்லுமுல்லு வேலை நடப்பதாக சந்தேகம் வருகிறது.

எனவே ஜனனி மறுபடியும் வீட்டிற்குள் வந்து ஏற்கனவே வாங்கி வைத்திருந்த சிசிடிவி கேமராவை அப்பத்தாவின் அருகில் வைக்க முடிவெடுத்திருக்கிறார். மேலும் என்ன சதி நடக்கப் போகிறது என்பதனை ஜனனி கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார் இவ்வாறு இதன் மூலம் குணசேகரனுக்கு மிகப்பெரிய ஆப்பு இருக்கு அவருடைய சுயரூபமும் அனைவருக்கும் தெரியவரும்.

இவ்வாறு சுயநினைவு இல்லாத போட்ட கையெழுத்து செல்லாது மேலும் மறுபுறம் அப்பத்தா சொன்ன அந்த ஜகார்த்தனனை சீக்கிரத்தில் கண்டுபிடித்தால் ஜனனிக்கு எந்த பிரச்சினையும் இல்லாமல் அனைத்தும் அமைதியாக இருந்துவிடும் எனவே ஜனனி ஜீவானந்தத்தை கண்டுபிடித்து குணசேகரனின் கனவு கோட்டையான 40% ஷேரை கிடைக்க விடாமல் செய்யப் போகிறார்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment