டம்மி பிஸ்சிடம் சத்தியம் வாங்கி என்ன ஆகப்போகிறது.. குணசேகரனை நறுக்குனு நான்கு கேள்வி கேட்ட ரேணுகா

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் தொடர்ந்து பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது அனைத்து மருமகள்களும் ஒன்றிணைந்து குணசேகரனுக்கு பயத்தை காண்பித்துள்ளனர். எனவே குணசேகரன் திருமணத்தை இவர்கள் நிறுத்தி விடுவார்களோ என்ற பீதியில் இருந்து வரும் நிலையில் அதற்காக மருமகளிடம் சத்தியம் கேட்க ரேணுகா அனைவர் முன்பும் அசிங்கப்படுத்தி விடுகிறார் எனவே வாயை திறக்காமல் குணசேகரன் முடி கொளிக்கிறார்.

மேலும் இதனை அடுத்து குணசேகரன் எங்க நம்மளை மீறி ஆதிரை அருண் திருமணம் ஜனனி நினைத்தபடி நடந்து விடுமோ என்ற பயத்தில் இருந்து வருகிறார். எனவே மற்றவர்களை தன் பக்கத்தில் கூட்டு சேர்த்துக் கொள்ளும் விதமாக ஞானத்திடம் சென்டிமென்டாக பேசி சத்தியத்தை வாங்கிக் கொள்கிறார் எவ்வளவு அசிங்கப்பட்டாலும் ஞானமும் குணசேகரனுக்கு ஆதரவாக இருக்கிறார்.

இவ்வாறு எதற்கு தான் ஞானம் என்பது நாடகத்தில் நடித்து வருகிறார் என்பதே தெரியவில்லை மிகவும் டம்மி பிஸ்சாக இருக்கிறார். இதனை அடுத்து ஜான்சி ராணி கரிகாலன் கையை உடைத்து மாவு கட்டு போட்டிருக்கும் நிலையில் இதனை பார்த்து மிகவும் வருந்துகிறார் மேலும் ஆக்ரோஷமாக எஸ்கேஆர் குடும்பத்தை உண்டு இல்லை என ஆக்க வேண்டும் என ஆவேசப்படுகிறார்.

இவ்வாறு இதனை எல்லாம் பார்த்து கடுப்பான கதிர், ஜனனி, நந்தினி மற்றும் சக்தியை நடுத்தெருவில் விட்டு விட்டு நீங்க எப்படி வேணாலும் வாங்க இல்லையென்றால் நடந்து வாங்க என்று சொல்லி ஆதரவை கூட்டிக்கொண்டு போய்விடுகிறார். பிறகு இவர்கள் புலம்பிக்கொண்டே வீட்டிற்கு செல்ல கதிர் நடந்த அனைத்து விஷயங்களையும் குணசேகரனிடம் சொல்கிறார்.

எனவே குணசேகரனை உசுப்பேத்தி விட்ட நிலையில் ஜனனியும் சக்தியும் தாறுமாறாக பேசி அசிங்கப்படுத்துகிறார்கள். பிறகு இதயெல்லாம் பொறுமையாக கேட்ட குணசேகரன் கதிரை என்ன பண்ணனுமோ நான் அதை பண்ணிக்கிறேன் நீ பேசாமல் போய் படு என்று சொல்லி அனுப்பி விடுகிறார். அதற்கு படுத்தால் எனக்கு தூக்கம் வராது என சொல்ல குணசேகரன் எது சாப்பிட்டால் தூக்கம் வருமோ அதை சாப்பிடு போய் படு என்று நக்கலாக பேசி அனுப்புகிறார்.

மேலும் இந்த கல்யாணத்தில் யார் மூலமாக பிரச்சினை வந்தாலும் நான் பார்த்துகிட்டு சும்மா இருக்க மாட்டேன் என சொல்ல அதற்கு சக்தி யாரை மிரட்டி பாக்குறீங்க என்று சொல்கிறார். ஆனால் சக்தி ஜனனியை விட டபுள் மடங்கு ரேணுகா குணசேகரன் வெளுத்து வாங்குகிறார். மேலும் ரேணுகாவுடன் இணைந்து நந்தினியும் குணசேகரனை குத்தி காட்டி பேச இதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.

Leave a Comment