குணசேகரன் படிக்காத முட்டாள் என்றால் எஸ்கேஆர் குடும்பம் படித்த முட்டாளாக இருக்கிறது.! புள்ளப் பூச்சி கையை உடைத்து மாவு கட்டுடன் கரிகாலன்.. பீதியை உண்டாக்கிய மருமகள்கள்

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல்களில் ஒன்றுதான் எதிர்நீச்சல் இந்த சீரியலில் தற்பொழுது குணசேகரன் நினைத்தபடி சொத்துக்களை ஆட்டையை போட்டுக்கொண்டு ஆதிரை-அருண் திருமணத்தை தடுத்து வைத்திருக்கும் நிலையில் கரிகாலனுக்கு ஆதிரையை திருமணம் செய்து வைக்க நினைக்கிறார். இவ்வாறு இந்த போட்டியில் குணசேகரன் ஜெயிப்பாரா இல்லையென்றால் இவரை தோற்கடிக்கும் முயற்சிகள் அந்த வீட்டின் மருமகள்கள் போராடிய வரும் நிலையில் இவர்கள் வெற்றி பெறுவார்களா என்ற எதிர்பார்ப்பு உடன் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

இவ்வாறு இந்த பிரச்சனைக்கு இடையில் அப்பத்தா சொன்ன அந்த ஜீவானந்தம் யார் என்று தெரியாமல் கதை சுற்றிக் கொண்டிருக்கிறது. மேலும் எஸ்கேஆர் குடும்பத்தில் இருப்பவர்கள் அருணை குணசேகரன் குடும்பத்தினர்கள் தான் கடத்தி வைத்திருக்கிறார்கள் என்று நினைத்து வரும் நிலையில் மறுபுறம் குணசேகரனும் கதிரும் எஸ்கேஆர் குடும்பத்துடன் சேர்ந்து இந்த வீட்டின் மருமகள் அருணை வைத்து ஏதோ கேம் விளையாடுறாங்க என்று தவறாக நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் தற்பொழுது அனைவரும் அருணை கண்டுபிடிக்க வேண்டும் என்ற விஷயத்தில் தீவிரமாக இறங்கி உள்ளனர் ஆனால் கௌதம் சரியான நேரத்தில் அருணை வேறு பாதுகாப்பான இடத்திற்கு மாற்றி விடுகிறார் இந்நிலையில் கரிகாலன் அரசு இடம் மாட்டிக் கொண்டு சின்ன பிண்ணம் ஆகிவிட்டார் மொத்த அடியும் கதிர் மேல் விழாமல் கரிகாலனுக்கு பலத்த அடி விழுந்துவிட்டது.

இவ்வாறு பல திருப்பங்கள் இருந்து வந்தாலும் கடைசியில் ஆதிரைக்கும் அருணுக்கும் தான் திருமணம் நடக்க போகிறது. இவ்வாறு இரண்டு குடும்பத்திற்கும் இடையில் பலிகாடாக கரிகாலன் மாட்டிக் கொண்ட நிலையில் தற்பொழுது மாவு கட்டு போடும் அளவிற்கு வந்துள்ளது. இதனை பார்த்த ஜான்சி ராணி என் பையன் கைய ஒடச்ச அந்த எஸ்கேஆர் குடும்பத்தை ஒரு வழி பண்ணாம விட மாட்டேன் என உச்சகட்ட கோபத்தில் இருக்கிறார். இவ்வாறு இவ்வளவு பிரச்சனைக்கும் காரணம் யாரோ அவர்களை அடிக்காமல் எஸ்கேஆர் குடும்பத்தினர்கள் புள்ள பூச்சியை போட்டு அடித்துக் கொண்டிருக்கின்றனர் படித்த முட்டாளாக இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

Leave a Comment