முடியை பிடித்து நந்தினியை கொடுமைப்படுத்தும் கதிர்.! கொடூரமாக சண்டை போட்டுக் கொள்ளும் குணசேகரன் குடும்பத்தினர்.. அதிர்ச்சியில் ஜனனி

தமிழ் சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சியாக இருந்து வரும் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் தற்போது பெண்களின் ஆதரவுடன் வெற்றி கரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் எதிர்நீச்சல் இந்த சீரியலில் ஆதிரை-அருண் திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும் என ஜனனி போராடி வருகிறார்.

இதற்கு சக்தி உதவியுடன் இருந்து வரும் நிலையில் ஜனனி அடுத்து என்ன போகிறார் என்பது மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்து வருகிறது. மறுபுறம் அப்பத்தா கூறும் ஜீவானந்தம் யார் என கண்டுபிடிக்க வேண்டும் என்ற கட்டாயத்திலும் இருந்து வரும் நிலையில் தற்பொழுது ஜீவானந்தத்தை பார்த்தியா என ஜனனியிடம் அப்பத்தா கேட்கிறார். அந்த ஜீவானந்தம் யார் என ஜனனி அப்பத்தாவிடம் கேட்க அவரைப் போய் மண்டபத்தில் பார்க்க வேண்டும் என சொல்கிறார்.

ஆனால் இதனைப் பற்றி தெளிவாக ஜனனிக்கு தெரியாமல் இருந்து வருகிறது. அதாவது தற்பொழுது வெளியாகி இருக்கும் ப்ரோமோ ஒன்றில் சக்திக்கு ஜனனிக்கு போன் போடும் நிலையில் எங்க வீட்டில் பெரிய பிரச்சனையா போய்கிட்டு இருக்கு நீ உடனே கிளம்பி வந்துடு என சொல்கிறார். அதற்கு ஜனனியும் வந்து விடுவதாக கூறிவிட்டு வீட்டிற்கு கிளம்புகிறார்.

இதனை அடுத்து கண்ணீரோடு நந்தினி அவன் பண்ற பாவத்துக்கு எல்லாம் பெருசா அனுபவிக்க போறான் என சாபம் விட அப்பொழுது வரும் கதிர் என்னடி அனுபவிக்க போறேன் என நந்தினி முடியை பிடித்து சண்டை போடுகிறார். எனவே இதனால் வீடு ரணகளமாக மாறுகிறது.

இவ்வாறு தொடர்ந்து பிரச்சனைகள் குணசேகரன் வீட்டில் வரும் நிலையில் அடுத்தது என்ன நடக்கப் போகிறது என்பதனை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இவ்வாறு அனைவரையும் எதிர்த்து எப்படி ஆதிரை-அருண் திருமணம் நடக்கப் போகிறது அப்பத்தா சொல்லும் ஜீவானந்தம் யார் என்பதை ஜனனி விரைவில் கண்டுபிடிக்க இருக்கிறார்.

Leave a Comment