விசாலாட்சிமையை நிக்க வைத்து கேள்வி கேட்கும் வாசுகி.! சந்தோஷத்தில் குணசேகரன்..

தமிழ் சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சிகளில் ஒன்றாக இருந்து வரும் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் தற்போது மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் எதிர்நீச்சல் இந்த சீரியலில் தொடர்ந்து பல திருப்பங்கள் இருந்து வரும் நிலையில் நாளுக்கு நாள் பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

அந்த வகையில் சமீபத்தில் வெளியாக இருக்கும் ப்ரோமோவில் நீங்க எப்படி டௌரி வாங்க ஒத்துக்கிட்டீங்க என ஜனனி தோழி வாசுகி விசாலாட்மியிடம் கேட்க நாங்க எதையும் கட்டாயப்படுத்தி கேட்கல அவங்க தங்கச்சிக்கு அவங்க எழுதி வைக்கிறாங்க என கூறுகிறார் ஆனால் கடைசில அது எஸ்.கே.ஆரோட சொத்து தானே என என வாசுகி சொல்கிறார்.

இதனால் விசாலாட்சி கோபப்பட்டு வாய மூடு என கூறுகிறார் மறுபுறம் குணசேகரன் இதனை பார்த்து சந்தோஷப்படுகிறார். அதற்கு முக்கிய காரணம் குணசேகரன் யாருக்காகவும் சொத்துகளை விட்டுக் கொடுக்காமல் இருந்து வரும் நிலையில் தற்பொழுது  இதன் காரணமாக தனது தங்கைக்காக அனைவருடைய கட்டாயத்தை தன் சொத்தினை எழுத முடிவெடுத்து இருக்கிறார்.

இதனால் குணசேகரன் தனது சொத்து போகிறது என்ற வருத்தம் இருந்து வருகிறது. ஆனால் தன்னுடைய குடும்பத்தினர் காயப்படுத்திய நிலையில் வேறு வழி இல்லாமல் சொத்தை எழுதி தர ஒப்புக்கொண்டார். எனவே இது எப்படியாவது தடுத்து நிறுத்தினால் கூட சந்தோஷம் என குணசேகரன் நினைத்து வருகிறார்.

அந்த வகையில் இவ்வாறு விசாலாட்சிமையை வாசுகி நிற்க வைத்து அனைவரும் முன்பும் கேள்வி கேட்பது அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ஆனால் இதனால் விசாலாட்சி கோபத்தில் இருந்து வரும் நிலையில் இதற்கு மேல் என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Leave a Comment