எதிர்நீச்சல் சீரியல் நடிகை ஜனனிக்கு திருமணகிமா விட்டதா.? புகைப்படத்தால் வருத்தத்தில் ரசிகர்கள்..

சன் டிவி ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்று வரும் நிலையில் தொடங்கிய நாளிலிருந்து தற்போது வரையிலும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடி வருவதனால் டிஆர்பியில் முன்னணி வகித்து வருகிறது. இந்த சீரியலை திருச்செல்வம் இயக்கி வரும் நிலையில் பெண்களுக்கான சுதந்திரமும், உரிமையும் கிடைக்க வேண்டும் என்பதனை மையமாக வைத்து இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த சீரியல் அண்ணன் தம்பிகள் என கூட்டு குடும்பத்துடன் வாழ்ந்து வரும் நிலையில் ஆண் ஆதிக்கம் அதிக அளவில் இருந்து வருகிறது. எனவே படித்த பெண்களை திருமணம் செய்துக் கொண்டு அவர்களை வீட்டில் அடிமையாக வேலைக்காரியை விட மோசமாக நடத்தி வருகின்றனர். அவர்களை எதிர்த்து கேட்க முடியாமல் பெண்கள் மிகவும் அமைதியாக இருந்து வருகிறார்கள்.

இந்நிலையில் இப்படிப்பட்ட குடும்பத்தில் கடைசி மருமகளாக ஜனனி இந்த வீட்டிற்கு வருகிறார். எனவே அந்த வீட்டில் நடக்கும் அநியாயங்களை தட்டி கேட்கும் நிலையில் பிறகு இவரை பார்த்து மற்ற மருமகள்களும் தங்களுடைய உரிமையை கேட்டு போராடுகின்றனர். இவ்வாறு இப்படி இந்த சீரியல் நிஜ வாழ்க்கையில் பல பெண்களின் மனநிலையை மாற்றியுள்ளது.

எனவே அந்தப் பெண்கள் தங்களுடைய கணவர் மற்றும் வீட்டில் இருப்பவர்களிடம் திமிராக நடந்து கொள்வதாகவும் நடவடிக்கையில் மாற்றம் இருப்பதாக பல ஆண்கள் கூறிவரும் நிலையில் இந்த சீரியலை நிறுத்துமாறு கோரிக்கை வைத்து வருகிறார்கள். ஆனால் இந்த சீரியலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால் தொடர்ந்து இந்த சீரியலை இயக்க முடிவு செய்துள்ளார் இயக்குனர்.

mathumitha

அந்த வகையில் இந்த சீரியலில் நடித்து வரும் ஜனனி கதாபாத்திரத்தில் மதுமிதா என்ற நடிகை நடித்து வருகிறார் இவர் கர்நாடகாவைச் சேர்ந்தவர் தெலுங்கில், கன்னடம் போன்ற மொழி சீரியல்களில் நடித்து வந்த இவர் எதிர்நீச்சல் சீரியலின் மூலம் தமிழ் சின்னத்திரைக்கு அறிமுகமாக இருக்கிறார். இந்நிலையில் மதுமிதாவிற்கு திருமணமாகி விட்டதாக தகவல் வெளியாகியிருக்கும் நிலையில் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

Exit mobile version