ஓஹோ கதை அப்படி போகுதா.? சூப்பர் ஸ்டாரை மொத்தமாக கண்ட்ரோலுக்கு கொண்டு வந்த சன் பிக்சர்ஸ்

Rajini : சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வசூல் தாண்டவம் ஆடிவரும் ஜெயிலர் உலக அளவில் 600 கோடி வரை வசூலித்து அனைவரையும் மிரட்டி வருகிறது. சூப்பர் ஸ்டார், நெல்சன் காம்போவில் அலப்பறையாக இருக்கும் இப்படம் அடுத்ததாக ஓடிடி தளத்திலும் தன்னுடைய கெத்தை காட்ட தயாராகி வருகிறது.

இந்த நேரத்தில் படத்தின் வசூலால் பூரிப்பில் இருக்கும் கலாநிதிமாறன் ரஜினியை சந்தித்து லாபத்தில் ஒரு பங்கை கொடுத்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே ஜெயிலர் படத்திற்காக 100 கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய ரஜினி தற்போது அதன் லாபமாக 110 கோடியையும் வாங்கி இருக்கிறார்.

இதற்கான செக்கை கலாநிதிமாறன் ரஜினியை தேடிச்சென்று கொடுத்திருப்பது பரபரப்பை கிளப்பி இருக்கிறது. ஆனால் இது என்ன பிரமாதம் இதைவிட ஒரு ஸ்பெஷல் ஐட்டம் இருக்கு என அவர் அடுத்ததாக 1.24 கோடி மதிப்புள்ள பிஎம்டபிள்யூ காரையும் சூப்பர் ஸ்டாருக்கு பரிசாக கொடுத்துள்ளார்.

இதுதான் இப்போது சோஷியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. உண்மையில் ரஜினிக்கு கலாநிதி மாறன் எதற்காக இப்படி அடுத்தடுத்த சர்ப்ரைஸை கொடுக்க வேண்டும் என்ற கேள்வியும் எழுந்து வருகிறது. விசாரித்து பார்க்கையில் முக்கிய விஷயமும் சிக்கி இருக்கிறது.

அதாவது சூப்பர் ஸ்டார் தற்போது ஜெய் பீம் ஞானவேல் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். அதை அடுத்து லோகேஷ் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்க உள்ளார். அதற்கு அடுத்தபடியாக மீண்டும் அவரை வைத்து ஒரு படத்தை தயாரிக்க வேண்டும் என்பதுதான் சன் பிக்சர்ஸ் போட்டிருக்கும் திட்டம்.

அதற்காகத்தான் தற்போது ரஜினியை தன் கண்ட்ரோலில் வைக்கும் வகையில் சன் பிக்சர்ஸ் அடுத்தடுத்த ஆச்சரியங்களை கொடுத்து அசத்துகிறதாம். இந்த விஷயம் தான் இப்போது சினிமா விமர்சகர்கள் மத்தியில் காரசாரமாக பேசப்பட்டு வருகிறது.