சன் மியூசிக்கில் தொகுப்பாளினியாக பணியாற்றிய மகாலட்சுமியா இது.! கிழிந்த பேண்டுடன் எப்படி போஸ் கொடுத்துள்ளார் பார்த்தீர்களா.!

சின்னத்திரை நடிகைகளில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகை மகாலட்சுமி. இவர் கடந்த எட்டு வருடங்களாக தனது சின்னத் திரை வாழ்க்கையை தொடர்ந்து வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் இவர் வில்லி கேரக்டராக இருந்தாலும் ஹீரோயின் கேரக்டராக இருந்தாலும் பாரபட்சம் பார்க்காமல் தனது நடிப்பு திறமையை மொத்தத்தையும் வெளி காட்டுவார். இதன்மூலம் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உருவானது.

இவர் தாமரை, வாணி ராணி, தேவதையை கண்டேன், பொண்ணுக்கு தங்க மனசு உள்ளிட்ட இன்னும் பல சீரியல்களில் நடித்து வருகிறார். இவர் முதலில் சன் மியூசிக் தொலைக்காட்சி மூலம் தான் தனது கேரியரை தொடங்கினார். பிறகு தொகுப்பாளராக பணியாற்றி வந்தார்.

இவருடைய பேச்சு திறமை மற்றும் நடிப்பு திறமையை வைத்து சின்னத்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதுமட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் ஒரு சில திரைப்படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார்.

இவ்வாறு இவர் திரை வாழ்க்கை நன்றாக போய்க் கொண்டிருந்த நிலையில் தேவதையை கண்டேன் சீரியலில் இவருடன் நடித்து வரும் ஈஸ்வரனின் மனைவி போலீசாரிடம் மகாலட்சுமிக்கும் ஈஸ்வரனுக்கும் கள்ளக்காதல் உள்ளது என்று புகார் அளித்திருந்தார். இது திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

மகாலட்சுமிக்கு 2016ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு அழகிய ஆண் குழந்தையும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது எல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் மகாலட்சுமி மற்ற நடிகைகளைப் போலவே இணையதளங்களில் தனது கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

makalakshmi

அந்த வகையில் தற்பொழுது மிகவும் ஸ்லிம்மாக மாறி ஜீன்ஸ் பேண்ட் மற்றும் டி-ஷர்ட் அணிந்து கொண்டு இருக்கும் புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நம்ம கொழுக்கு மொழுக்கு மகாலட்சுமியாக இது அடையாளமே தெரியல என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

makalakshmi

Leave a Comment

Exit mobile version