நடிகரும், இயக்குனருமான சசிகுமார் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நபராக வலம் வந்து கொண்டிருக்கிறார் இவர் 2008 ஆம் ஆண்டு வெளியான சுப்பிரமணியபுரம் படத்தை இயக்கி, நடித்தும் அசத்தியிருந்தார் இதுவே அவரது முதல் படமாகும். இந்த படத்தில் சசிகுமார் உடன் கை கோர்த்தது ஜெய், சமுத்திரகனி, சுவாதி, கஞ்சா கருப்பு மற்றும் பல டாப் நடிகர், நடிகைகள் நடித்து அசத்தியிருப்பார்.
இந்த படம் முழுக்க முழுக்க ஆக்ஷன், காமெடி, காதல் கலந்த திரைப்படமாக இருந்ததால் அனைத்து தரப்பட்ட மக்களையும், ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து இழுத்தது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து பல்வேறு படங்களை சசிகுமார் இயக்கியும், நடித்தும் இருந்தாலும் அவருக்கு மிகப்பெரிய பாராட்டு பெற்றுக் கொடுத்தது என்னவோ சுப்பிரமணியபுரம் படம்தான்.
எனவே அதன் இரண்டாவது பாகத்தை இயக்கினால் சிறப்பாக இருக்கும் என ரசிகர்கள் கேட்டுக் கொண்டு வருகின்றனர் இதற்கு அண்மையில் அவர் பதிலளித்துள்ளார் அதாவது எனக்கு எந்த ஒரு படத்தையும் இரண்டாம் பாகம் எடுப்பதில் துளியும் விருப்பமில்லை எனவும் அப்படியே இருந்தாலும் சுப்பிரமணியபுரம் இரண்டாம் பாகம் மட்டுமே எடுக்க வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
பெரும்பாலும் முதல் பாகம் வெற்றி அடைந்து விட்டால் அதன் 2வது பாகத்தை எடுப்பது வழக்கம் தான் ஆனால் அதே சமயம் முதல் பாகத்தில் நாம் அனைத்து விதமான கதையையும் சரியாக சொல்லி முடித்து விடுவோம் ஆனால் இரண்டாவது பாகத்தில் எந்த கதையை வைத்து இழுக்க வேண்டும் என்பதை சரியாக உணர வேண்டும்.
அப்படியில்லையென்றால் முதல் பாகத்தின் கதையோடு இரண்டாவது பாகத்தின் கதையை ஒப்பிட்டு பல்வேறு சர்ச்சைகளும், விமர்சனங்களும் எழ ஆரம்பித்து விடும் நன்றாக இருக்காது. ஆனால் சுப்பிரமணியபுரம் இரண்டாம் பாகத்தின் கதை எழுதி விட்டோம். அதாவது சுப்பிரமணியபுரம் படத்தில் சசிகுமார் ஆற்றங்கரை ஓரத்தில் கொலை செய்வது போல் காட்டி ஆடி இருப்பார்கள் தவிர இறந்து கிடப்பது போல படத்தில் காட்டியிருக்க மாட்டார்கள்.
அதனால் ஆற்றங்கரையில் இருந்து சசிகுமார் வெளிவந்து தன்னை கொல்ல நினைத்து அனைவரையும் பழி வாங்குவது போல் கதை களத்தை அமைத்து இருப்பதாக அமைந்து விடலாம். ஜெய்யும் நடிக்க இதில் ஆசை தெரிவித்தார் ஆனால் இந்த படத்தில் ஜெய் கழுத்தை அறுத்து போட்டு விடுவார்கள் அப்படி இருக்க அவர் எப்படி நடிக்க முடியும். நானும், சித்தன் மட்டும் தான் நடிக்க முடியும் என கூறியுள்ளார் விரைவில் சுப்ரமணியபுரம் இரண்டாவது பாகத்திற்கான படப்பிடிப்பு தொடங்கும் எனவும் கூறினார்.