பாலகிருஷ்ணாவுடன் நடிக்க சம்பளத்தை உயர்த்த ரெடியாக இருக்கும் ஸ்ருதிஹாசன்.? ஏன் தெரியுமா.?

தென்னிந்திய சினிமாவில் அடுத்தடுத்து தொடர்ந்து படவாய்ப்புகள் கைபற்றி சிறப்பான படங்களை கொடுத்து அசத்தி வருபவர் நடிகை சுருதிஹாசன். இவர் தமிழில் டாப் நடிகர்களான அஜித், விஜய், சூர்யா போன்ற டாப் நடிகர்களுடன் கை கொடுத்து நடித்து மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார் அதன்பின் இவருக்கு தென்னந்திய உலகம் முழுவதும் வாய்ப்புகள் கிடைத்தது.

அனைத்து மொழிகளிலும் சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வசத்தால் இவரது புகழ் வளர்ந்துகொண்டே இருக்கிறது அதிலும் தெலுங்கில் சொல்லவே வேண்டாம் இவர் நடித்த அனைத்து படங்களுமே ஹிட்டாகி உள்ளன. தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெற்றி நடைபோட்டு கண்டு வருகிறார். இருக்கின்ற வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக் கொண்டுதான் இருக்கிறார்.

சினிமாவையும் தாண்டி வெப்சீரிஸ் பக்கமும் தலைகாட்டி வருகிறார் மேலும் ஹிந்தியிலும் வாய்ப்புகள் குவிந்து வருகிறது இப்படி ஓடி கொண்டிருக்கும் இவர் சமீபகாலமாக போட்டோ ஷூட் என்ற பெயரில் ஆடையின் அளவை குறைந்துகொண்டே இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்வதை வழக்கமாக வைத்துள்ளார்.

அப்படி சமீபத்தில் வெளிவந்த புகைப்படங்கள் அனைத்தும் ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமைந்துள்ளது இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை சுருதிஹாசன் தெலுங்கு சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் பாலகிருஷ்ணாவுடன் கைகோர்த்து நடிக்கிறாராம் அவரது அப்பா வயதுள்ள ஒரு நடிகருடன் அடிப்பது தற்போது பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது.

இருப்பினும் சுருதிஹாசன் சிறப்பான கதை என்பதால் நடிக்கிறார் மேலும் இந்த படத்திற்காக இரண்டு கோடி சம்பளம் கேட்டுள்ளார் மேலும்  அந்த காட்சிகளில் ஏதேனும் வந்தால் அதற்காக தயாரிப்பாளரிடம் பேசி சம்பளத்தை உயர்த்த ரெடியாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Comment