கட்டிலில் சிறுவன் என்று நம்பி ஏமாந்த ஸ்ருஷ்டி டாங்கே.? பல நாள் கழித்து தெரிந்த உண்மை

Srushti dange : தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே. யுத்தம் செய், மேகா, ஜித்தன் 2, டார்லிங், வில் அம்பு, தர்மதுரை என தொடர்ந்து நல்ல படங்களில் நடித்த இவருக்கு தற்பொழுது பட வாய்ப்புகள் பெரிதாக கிடைக்கவில்லை அதனால் வருகின்ற 1, 2 படங்களில் கிளாமர் காட்டியும் நடிக்க திட்டமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

2023 -ல் கைவசம் சந்திரமுகி 2 படம் மட்டுமே இருக்கிறது. இந்த நிலையில் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே ஒரு சிறுவனிடம் ஏமாந்து போன கதையைக் கூறி இருக்கிறார் கணேஷ்பாபு இயக்கத்தில் இவர் நடித்த திரைப்படம் கட்டில்.

இந்த படத்தில் நடந்த சுவராஸ்யமான தகவலை பகிர்ந்து உள்ளார். அவர் சொன்னது கட்டில் படத்தில் எனக்கு மகளாக நடிப்பதற்காக ஒரு சிறுவனை அழைத்து வந்தனர் அந்த சிறுவன் அத்தனை அழகாக துருதுருவென இருந்தான் நடிப்பிலும் நல்ல திறமையுடன் இருந்தான்.

ஆனால் அவனுடன் நடித்த சில நாட்களுக்கு பிறகு தான் நான் ஏமாந்து போனது எனக்கே தெரிய வந்தது எனக்கு மகனாக நடித்தவன் சிறுவன் அல்ல சிறுமி இயக்குனர் கணேஷ் பாபுவின் மகள் அஞ்சனா தமிழ்ச்செல்வி என்பது எனக்கு தாமதமாக தான் தெரிய வந்தது.

இப்பொழுது உள்ள சிறுவர்கள் எல்லோருமே மிகுந்த திறமையுடன் இருப்பதாக அவர் கூறியுள்ளார். விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் திரை உலகில் வளர்ந்து  நடிகையாக இருந்து கேட்டு இதுகூட உங்களால கண்டுபிடிக்க முடியலையா என கூறி கமெண்ட் அடித்து லைக்குகளை தட்டி வீசி வருகின்றனர்.

Leave a Comment