ஊரடங்கிலும் மாஸ்க் போடாமல் நடுரோட்டில் நடனமாடிய ஸ்ரேயா.! வைரலாகும் வீடியோ

உலக நாடுகளை தனது தாக்கத்தின் மூலம் அச்சுறுத்தி வருகிறது கொரோனா வைரஸ்.இதுவரை இந்த நோயின் தாக்கத்தால் பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து நாடுகளும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி வருகிறது.

இந்நிலையில் வளர்ந்த நாடுகள் இதற்கு எதிர்வினையாற்றும் மருந்தை கண்டுபிடித்து வருகின்றனர். இந்த நிலையில் வெளிநாட்டில் வசித்து வரும் பிரபல நடிகையான ஸ்ரேயா அவர்கள் நடுரோட்டில் என்றபடி நடனமாடினார் அத்தகைய வீடியோ சமூக வலைத்தளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சிரேயா சரன் இவர் உனக்கு 20 எனக்கு 18 என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். இதனையடுத்து அவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விக்ரம், விஜய், ரஜினிகாந்த் இவர் படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார்.

இதனையடுத்தே பல படங்களில் நடித்து தனக்கென ஒரு நல்ல பெயரை தக்க வைத்து இருந்த ஸ்ரேயா. வடிவேலு கதாநாயகனாக நடித்த இந்திரலோகத்தில் நான் அழகப்பன் என்ற திரைப்படத்தில் ஸ்ரேயா அவர்கள் ஒரு குத்துப்பாடலுக்கு நடனம் ஆடினார் இதன் மூலம் பிறகு தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் குறையத் தொடங்கின இருப்பினும் பட வாய்ப்புகளை முயற்சித்துக் கொண்டிருந்தாலும் தமிழில் சொல்லும் அளவிற்கு வாய்ப்புகள் கிடைக்காததால் தெலுங்கு பக்கம் தனது தலையை திருப்பி அவ்வப்போது ஒரு சில படங்களில் நடித்து வந்தார்.

இந்த நிலையில் திடீரென தனது காதலரை திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டிலேயே செட்டில் ஆக்கிக்கொண்டார். இந்த நிலையில் தற்போது கரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது ஆனால்  இவர் நடுரோட்டில் கணவருடன் எடுத்துக் கொண்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் காட்டுத் தீ போல பரவி வருகிறது அதுமட்டுமல்லாமல் இது தற்போது சர்ச்சைக்குரிய ஒன்றாக மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதோ அந்த வீடியோ .

Leave a Comment