அவ்வளவு சொல்லியும் கேட்காத ஜான்வி கபூர்..! தாய் பேச்சு கேட்காததால் மன கஷ்டத்தில் நடிகை ஸ்ரீதேவி..!

தமிழ் சினிமாவில் கால் தடம் பதித்து இந்திய சினிமாவையே தன் பக்கம் இழுத்து போட்ட ஒரு நடிகை என்றால் அது ஸ்ரீதேவிதான் இவர் தமிழ்மொழி மட்டும் இல்லாமல் பல்வேறு மொழிகளிலும் சிறந்த நடிகையாக வலம் வந்தது மட்டுமல்லாமல் பல நடிகைகளுக்கு எடுத்துக்காட்டாக விளங்கி வருகிறார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை தன்னுடைய நண்பரின் திருமண விழாவிற்கு சென்ற பொழுது நெஞ்சுவலி காரணமாக இயற்கை எய்திவிட்டார் என்ற செய்தி நாடெங்கும் பரவி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது மட்டுமல்லாமல் அவருடைய இடத்தை அவருடைய ஆசை மகள் ஜான்வி கபூர் நிரப்புவார் என்ற கேள்வி பலரிடமும் விழுந்துள்ளது.

ஜான்வி கபூர் தற்போது இந்தி சினிமாவில் மிக சிறந்த நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அந்த வகையில் இவருடைய அம்மா ஸ்ரீதேவிக்கும் இவருக்கும் ஏற்கனவே சில கருத்து வேறுபாடு இருந்ததாக பிரபல  பத்திரிகைகள் செய்தி ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

அந்த வகையில் ஸ்ரீதேவி சினிமாவில் என்னதான் சாதித்து பெயரையும் புகழையும் சம்பாதித்தாலும் தன் மகள் சினிமாவில் நடிப்பது அவருக்கு கொஞ்சம் கூட பிடிக்காதம்.  ஏனெனில் அவருக்கும் சாதாரண தாய்மார் போல அவரை படிக்க வைத்த திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்பதுதான் ஆசையாம்.

ஆனால் வளர வளர ஸ்ரீதேவியின் மகள் என்னுடைய கேரியரில் நானே பார்த்துக்கொள்கிறேன் என தன்னுடைய தாயிடம் சண்டை போட்டு ஸ்ரீதேவியை கஷ்டத்திற்கு ஆளாகி விட்டாராம்.  பின்னர் மனவருத்தத்துடன் ஜான்வி கபூர் சொல்வதை ஏற்றுக் கொண்ட ஸ்ரீதேவி தன் மகள் தன் பேச்சை கேட்கவில்லை என்ற மன வருத்தம் மட்டும் அதிகம் இருந்ததாக கூறப்படுகிறது.

sridevi-1
sridevi-1

இந்த கவலை ஸ்ரீதேவிக்கு இறுதிவரை இருந்ததாகவும் மனதளவில் அவர் பெரிதளவு பாதிக்கப்பட்டதாகவும் அவருடைய நெருங்கிய வட்டாரத்தில் உள்ளவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

Leave a Comment